News March 17, 2024
திருப்பதி கோயிலுக்கு சென்ற வாலிபர் மாயம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம், ஊராட்சி உப்ரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (36). இவர் கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் தேதி நண்பர்களுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீட்டிற்கு இதுவரை திரும்பி வராததால் பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 20, 2025
திருவள்ளூர்: ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (20.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்காக மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரகாலங்களில் அருகிலுள்ள காவல் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொள்ளலாம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
News October 20, 2025
ஆரணி: பச்சிளம் குழந்தை மீட்பு

திருவள்ளூர், ஆரணி ஆற்றங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 20, 2025
திருவள்ளூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!