News March 17, 2025
குடிநீரால் நின்ற திருமணம்.. கண்ணீரில் மணமக்கள்!

இதுக்கெல்லாமா கல்யாணம் நிற்கும் எனச் சிந்திக்க வைக்கிறது இந்த சாம்ராஜ்நகர் சம்பவம். கர்நாடகாவின் ஹிரியூரில் மனோஜ் – அனிதா ஜோடிக்கு நேற்று திருமணம் செய்ய கோலாகலமாக ஏற்பாடுகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த வரவேற்பு விழாவுக்கு தாமதமாக வந்த சிலருக்கு தண்ணீர் பாட்டில் வைக்கவில்லையாம். இதனால் ஏற்பட்ட மோதலால் கல்யாணமே நின்றுபோய் கடைசியில் கண்ணீருடன் இளம்ஜோடி மண்டபத்தை காலி செய்த அவலம் நடந்துள்ளது.
Similar News
News March 17, 2025
மனைவியின் கிண்டலால் கணவன் தற்கொலை!

யார் கிண்டல் செய்தாலும் ஒரு ஆணால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், மனைவியே கிண்டல் செய்தால்? கர்நாடகாவை சேர்ந்த பராசிவமூர்த்தி என்பவரின் வழுக்கை தலையை சுட்டிக்காட்டி, உங்களுடன் வெளியே வரவே வெட்கமாக இருக்கிறது எனக் கூறி வந்துள்ளார் மனைவி மம்தா. மேலும், வரதட்சணை வழக்கிலும் அவரை சிறையில் தள்ளியிருக்கிறார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த மூர்த்தி, மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.
News March 17, 2025
பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி கப்பல் வழங்கிய சீனா!

பாகிஸ்தானுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் சீனா, தற்போது அந்நாட்டுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ளது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தின்படி, இன்னும் 6 நீர்மூழ்கி கப்பல்களை அந்நாட்டுக்கு சீனா வழங்க வேண்டும். இது தவிர, 4 போர்க் கப்பல்களையும் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. அரபிக் கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காக பாகிஸ்தானின் கடற்படையை சீனா வலுப்படுத்துவதாக கூறப்படுகிறது.
News March 17, 2025
உரிமைகளை தடுப்பது நியாயமா? – பொங்கிய சரத்!

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அண்ணாமலை, தமிழிசை, H.ராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு, பாஜகவின் சரத் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நியாயமான போராட்ட உரிமைகளை தடுப்பது நியாயமா? என X தளத்தில் கேள்வி எழுப்பி CM ஸ்டாலினை டேக் செய்துள்ளார்.