News March 22, 2025
அனைத்து போலீசாருக்கும் பறந்த எச்சரிக்கை!

ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்களுடன் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை உடனடியாக தாக்கல் செய்யுமாறு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதேபோல, ரவுடிகள் குறித்து உளவு போலீசார் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.
Similar News
News March 22, 2025
கூட்டாட்சி பரிசு அல்ல, உரிமை: பிஆர்எஸ்

கூட்டாட்சி என்பது பரிசு அல்ல; உரிமை என தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராமராவ் தெரிவித்துள்ளார். உரிமைகளை காக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊக்கமளிக்கிறது என புகழாரம் சூட்டிய அவர், கூட்டாட்சி என்பது மாநிலங்களுக்கான பரிசு அல்ல; உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன். அடிப்படை உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும் என்றார்.
News March 22, 2025
தொகுதி மறுசீரமைப்பு: பிரதமருக்கு ஜெகன் கடிதம்

சென்னையில் திமுக தலைமையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்த நிலையில், ஆந்திர முன்னாள் CM ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காதவாறு மறுசீரமைப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 22, 2025
சினிமாவில் செண்டிமெண்ட் பார்த்தாரா உதயநிதி?

சேலம் பின்னணியில் எடுக்கப்படும் படங்கள் ஓடாது என்ற செண்டிமெண்ட் இருப்பதாக சொன்னபோது, உதயநிதி தயக்கம் அடைந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், என்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து மாமன்னனில் நடித்தார் எனக் கூறிய மாரி, கதை சொல்லும் விதத்தில், ஒரு மனிதரை மேலே கீழே என்று இழிவாக காட்டக்கூடாது என்ற என்னுடைய சினிமா பாணி, இன்றைக்கு பல இயக்குனர்களுக்கு சிக்கலாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.