News May 29, 2024
மூன்று நாட்களில் மரணம் விளைவிக்கும் வைரஸ்

சீன ஆய்வாளர்கள் புதிதாக ஒரு செயற்கை வைரஸை உருவாக்கியுள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் பல ஆயிரம் மக்களைக் கொன்ற எபோலா வைரஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக அதைப் போன்றே செயற்கை வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்தபோது, இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி ஆகியவற்றை பாதித்து மூன்று நாட்களில் மரணத்தை ஏற்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. ஆனால், இவை வெளியே பரவாது என்பது சற்று நிம்மதியான விஷயம்.
Similar News
News September 18, 2025
கால் வலி நீங்க காலையில் இந்த யோகா பண்ணுங்க!

சுப்த பாதாங்குஸ்தாசனம் செய்வது முதுகு, இடுப்பு & கால்தசைகளை வலுவாக்கும்.
*கால்களை நேராக நீட்டி படுக்கவும் *வலது காலை மடித்து, மார்பு வரை கொண்டு வந்து, வலது பெருவிரலால் பிடித்து கொள்ளவும் *இப்போது காலை மேல் நோக்கி நேராக நீட்டவும் *உதவிக்கு யோகா பட்டையை பயன்படுத்தலாம் *இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல, காலை மாற்றி செய்யவும். SHARE IT.
News September 18, 2025
இனி அவர் முகமூடியார் பழனிசாமி: TTV

எடப்பாடி பழனிசாமியை இனிமேல் முகமூடியார் பழனிசாமி என அழைக்க வேண்டும் என்று TTV தினகரன் விமர்சித்துள்ளார். EPS செய்யும் துரோகத்தை சிலர் ராஜதந்திரம் என நினைப்பதாகவும், MGR, ஜெயலலிதா வெற்றிகண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற பார்ப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், என்னதான் பண பலம், படை பலம் இருந்தாலும் வரும் தேர்தலில் தோல்வியை தழுவுவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
புரட்டாசி மாதத்தின் சிறப்பான பெருமாள் வழிபாடு!

அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து நீராடி, நெற்றியில் பெருமாளுக்குரிய திருநாமம் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டிலுள்ள பெருமாள் படத்திற்கு, வடை மாலை சாற்றி, நைவேத்தியமாக புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டலை படைக்கலாம். மாவிளக்கு போட வேண்டும். தேங்காய் உடைத்து சாமிக்கு பூஜை செய்ய வேண்டும். பிறகு, ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். SHARE.