News January 5, 2025

400 ஆண்டுகளாக ஞாயிறு அன்று கறி சாப்பிடாத கிராமம்

image

பல வீடுகளில் ஞாயிறில் கறி சமைப்பது வழக்கம். ஆனால் பல நூறு ஆண்டாக ஆந்திராவின் நந்தியாலா மாவட்டம் எஸ்.கோட்டூர் கிராமத்தில் ஞாயிறு அன்று கறி சமைப்பது, மது அருந்துவது இல்லை. ஏன் யாராவது இறந்தாலும், இறுதிச் சடங்கு அடுத்த நாள் தான். 400 ஆண்டுகளுக்கு முன்பு வயல்வெளியில் கிடைத்த சுப்பிரமணியேஸ்வரர் சிலைக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஞாயிறு பிடித்தமான நாள் என கிராம மக்கள் நம்புவதால் இந்த நம்பிக்கை.

Similar News

News September 13, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 457 ▶குறள்: மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். ▶பொருள்: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

News September 13, 2025

மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை: ஆதவ் அர்ஜுனா

image

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தால் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 1967-ல் சாமானிய புரட்சி, 1977-ல் சரித்திர புரட்சி என்ற வரிசையில் 2026-ல் விஜய் தலைமையில் தமிழகம் ஜனநாயக புரட்சியை சந்திக்கும் என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News September 13, 2025

டிவி பார்க்கும் போது சாப்பிட்டா இவ்வளவு பிரச்னையா!

image

★டிவியை பார்க்கும் போது கூடுதலாக சாப்பிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ★அவ்வாறு சாப்பிடும்போது ‘போதும்’ என்று மூளை சமிக்ஞை செய்யும். ★ஆனால், கவனம் முழுவதும் டிவி திரையில் இருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணர முடியாமல் போகும். ★இதனால் விரைவாக சாப்பிட நேரிடும். ★இதன் காரணமாக வயிற்று உப்புசம், அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

error: Content is protected !!