News April 21, 2025
JEE மெயின்ஸ் தேர்வில் அசத்திய கிராமம்… 40 பேர் தேர்ச்சி

JEE முதன்மைத் தேர்வில் பிஹாரை சேர்ந்த கிராமம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பட்வ டோலி என்ற கிராமத்தில், இலவச பயிற்சி அளிக்கும் ‘விருக்ஷா சன்ஸ்தான்’ நிறுவனத்தில் பயிற்சிபெற்ற 28 பேர் உள்பட 40 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இக்கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பொறியாளர் இருக்கின்றார். இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மற்ற கிராமங்களுக்கும் கிடைத்தால் நாட்டுக்கே மாற்றம் கிடைக்கும்.
Similar News
News December 29, 2025
விஜய்யை கூட்டணிக்கு அழைத்த வானதி சீனிவாசன்

NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு <<18692245>>தமிழிசை<<>> நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசனும் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி என்பதே பொது எதிரியை வீழ்த்தத்தான் என்ற அவர், திமுகவை சேர்ந்தே வீழ்த்தலாம் என்று விஜய்யை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரிவினையை ஏற்படுத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
News December 29, 2025
மாபெரும் உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை 4 முறை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். அவர் 2018(1,291 ரன்கள்), 2022(1,290 ரன்கள்), 2024(1,659 ரன்கள்) & 2025-ல்(1,703 ரன்கள்) அதிக ரன்களை விளாசியுள்ளார். யாரும் இச்சாதனையை 2 முறைகூட செய்ததில்லை. மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில்(2024 & 2025) அதிக ரன்களை விளாசிய ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.
News December 29, 2025
பொங்கல் பரிசு.. தமிழக அரசு புதிய உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளை கணக்கெடுத்து அனுப்புமாறு துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர், இறப்பு, இடப்பெயர்வு காரணமாக பயன்பாட்டில் இல்லாத அட்டைகளின் விவரங்களை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், விரைவில் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.


