News October 19, 2025

சாபத்தால் தீபாவளி கொண்டாடாத கிராமம்

image

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இமாச்சலின் சம்மூ கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் தீபாவளியை கொண்டாட தயாரானார். அப்போது இறந்த அவளது கணவரின் உடல் வீட்டிற்கு வர, உடன்கட்டை ஏறினாள். அதற்கு முன்பு, ‘இந்த ஊர் மக்கள் தீபாவளியை கொண்டாடவே முடியாது’ என சாபமிட்டாள். இதன் பிறகு தீபாவளி கொண்டாடியபோதெல்லாம் இறப்பு (அ) பேரழிவு ஏற்பட்டுள்ளது. சாபத்தாலேயே இவ்வாறு நடப்பதாக, இதுவரை அவர்கள் தீபாவளி கொண்டாடவில்லை.

Similar News

News October 19, 2025

International Roundup: காஸாவில் 11 பேரை கொன்ற இஸ்ரேல்

image

*டிரம்ப்பின் குடியுரிமை, பாதுகாப்பு கொள்கைகளை எதிர்த்து பல நாடுகளில் போராட்டம். *பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் தனது பட்டத்தை துறந்தார். *பாகிஸ்தான் – ஆப்கன் இடையே கத்தாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை. *காஸாவில் 11 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றது. *இயற்பியல் பரிசு பெற்ற சீன விஞ்ஞானி சென் நிங் யாங் காலமானார். *ஸ்வீடனில் சர்வதேச யூத திரைப்பட விழா திரையிட யாரும் முன்வராததால் ரத்து.

News October 19, 2025

தேர்வுக்குழுவுக்கு செமத்தியான ரிப்ளே கொடுத்த ஷமி

image

ஆஸி.,க்கு எதிரான ODI தொடரில் இடம்பெறாத விரக்தியில் இருந்த ஷமி, தேர்வுக்குழுவிற்கு செமத்தியான மெசேஜ் ஒன்றை தனது பவுலிங் மூலம் தெரிவித்துள்ளார். ரஞ்சி டிராபியில் உத்தரகாண்டிற்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதனால், அவரது பெங்கால் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும், ஷமிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

News October 19, 2025

ரொமான்ஸ் செய்வதற்கு மட்டும் தான் நடிகைகளா?

image

இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டுமே படம் எடுப்பதாக நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை போன்ற நடிகைகளை ரொமான்ஸ் செய்வதற்கும், கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி கொள்வதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், நடிகைகளின் திறமையை இருட்டடிப்பு செய்யும் நிலைப்பாட்டை இயக்குநர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!