News April 21, 2025

மிகவும் மோசமான சூழ்நிலை.. ஸ்டாலின் வேதனை

image

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று CM ஸ்டாலின் மீண்டும் முழங்கியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் தான். கருணாநிதி ஆட்சியின்போது இருந்ததைவிட, தற்போது மோசமான சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என வேதனை தெரிவித்த அவர், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் தெளிவான முயற்சிகளுக்காக மத்திய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக குற்றம் குற்றம் சாட்டினார்.

Similar News

News December 9, 2025

2025-ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய PHOTOS

image

2025-ம் ஆண்டு ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதிர்ச்சி, துக்கம், விரக்தி, பெருமை, நம்பிக்கை, மகிழ்ச்சி என கலவையான எமோஷன்களை ஏற்படுத்திய நிறைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதில் மிக மிக முக்கியமான சம்பவங்களை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். 2025-ம் ஆண்டை ரீவைண்ட் செய்து பார்க்க அவற்றை SWIPE செய்யுங்கள். உங்கள் மனதை உலுக்கிய சம்பவத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News December 9, 2025

சற்றுமுன்: விஜய் கூட்டத்தில் அதிரடி கைது

image

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு <<18510199>>துப்பாக்கியுடன் <<>>வந்தவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டத்திற்கு வந்த சிவகங்கையை சேர்ந்த ஒருவரின் இடுப்பில் துப்பாக்கி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வந்தநிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

News December 9, 2025

தமிழகத்தில் தவெகவுக்கு சிக்கல்: புஸ்ஸி ஆனந்த்

image

தமிழகத்தில் எல்லா வகையிலும் தவெக பரப்புரைக்கு சிக்கல் ஏற்படுத்துகின்றனர் என புஸ்ஸி ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளார். விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய அவர், மற்ற கட்சிகள் புதுச்சேரியில் இவ்வளவு கூட்டத்தை கூட்டுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சிலவற்றை கொடுத்து உழைக்க வேண்டும் என கூறினார். தற்போது தளபதியின் (விஜய்) குடும்பமாகவே தொண்டர்கள் திரளாக வந்துள்ளதாகவும் கூறி நெகிழ்ந்தார்.

error: Content is protected !!