News October 24, 2024
தினம் ஒரு திருக்குறள் (2)

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
* விளக்க உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
SHARE IT.
Similar News
News January 7, 2026
காஞ்சி கோயிலில் 312 சவரன் தங்கம் மாயம்

சபரிமலை கோயில் தங்கத் திருட்டை போல், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் தங்கம் காணாமல் போன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் பதிந்த வழக்கில், திருத்தி அமைக்கப்பட்ட FIR-ல் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட 312 சவரன் தங்கத்தை கொண்டு செய்யப்பட்டதாக கூறப்பட்ட சிலையில், துளி கூட தங்கம் இல்லை என IIT நிபுணர் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
News January 7, 2026
பொங்கல் பரிசு ₹3,000.. வெளியானது புதிய அறிவிப்பு

சரியான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ₹3,000 வழங்குவதையும், முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொங்கல் தொகுப்பு, ரொக்க தொகை வழங்குவதில் குளறுபடி இருந்தால், உடனே 1800 425 5901, 0424 -2252052 எண்களில் புகார் கூறலாம் என முதல் மாவட்டமாக ஈரோடு கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். இதேபோல், அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அறிவிக்கவுள்ளனர்.
News January 7, 2026
பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறதா காங்கிரஸ்?

மகாராஷ்டிராவின் அம்பெர்நாத் நகராட்சி தேர்தலில், காங்.,+ பாஜக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இத்தகவலை அம்மாநில காங்., மூத்த தலைவர் சச்சின் சாவந்த் மறுத்துள்ளார். மாறாக, சிவசேனாவின் (ஷிண்டே) ஊழல் சாம்ராஜ்யத்தை ஒழிக்க, கட்சி அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு பல கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து அம்பெர்நாத் மேம்பாட்டு முன்னணியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


