News October 24, 2024
தினம் ஒரு திருக்குறள் (2)

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
* விளக்க உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
SHARE IT.
Similar News
News October 24, 2025
தமிழ் சினிமா பிரபலம் மறைவு.. கண்ணீர் அஞ்சலி

மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு இயக்குநர் பாக்யராஜ் அஞ்சலி செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், ரஹ்மான் எங்கேயாவது வெளியூர் போனா சபேஷை தான் இசையமைக்க கூப்பிடுவாங்க… அந்த அளவுக்கு அவருக்கு திறமை இருந்துச்சு. தமிழ் சினிமாவின் மிகப்பெரிய திறமைசாலி நம்மை விட்டு பிரியும்போது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது. தமிழ் சினிமா நல்ல இசைக் கலைஞரை இழந்துவிட்டது என்று உருக்கமாக தெரிவித்தார்.
News October 24, 2025
தங்கம் விலை ₹2 லட்சமாக உயரும்

சர்வதேச அளவில் தங்கம் ஒரு அவுன்ஸ் $4100-க்கு வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை சிறிதளவு வீழ்ச்சி கண்டிருந்தாலும், இனி உயரவே வாய்ப்புள்ளது. 2028-ல் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் $8000 வரை உயரும் என JP Morgan நிறுவனம் கணித்துள்ளது. இதன் அடிப்படையில் இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ₹2 லட்சம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
News October 24, 2025
சாவின் விளிம்புக்கு சென்றேன்: திலக் வர்மா

2022-ல் சாவின் விளிம்புக்கு சென்றதாக திலக் வர்மா கூறியுள்ளார். ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர உடற்பயிற்சி செய்ததால், ‘Rhabdomyolysis’ என்னும் தசை சிதைவு நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச A அணியுடனான போட்டியின் போது, கை விரல்கள் இயங்காமல் போக, ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளார். அப்போது, சற்றே தாமதித்திருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும் என டாக்டர் தெரிவித்ததாக அவர் கூறினார்.


