News October 24, 2024
தினம் ஒரு திருக்குறள் (2)

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
* விளக்க உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
SHARE IT.
Similar News
News December 6, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும். ➤சாமந்திப்பூ இதழ்களை பிரித்து நன்கு காய வைக்கவும். ➤1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும். ➤8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். ➤அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE THIS.
News December 6, 2025
சற்றுமுன்: மழை வெளுத்து வாங்கும்

டிட்வா புயல் எதிரொலியால், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கியது. பின், புயல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததால், நேற்று சற்று மழை குறைந்தது. இந்நிலையில், கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது.
News December 6, 2025
திமுக – பாஜக இடையே மறைமுக உறவு: ஜெயக்குமார்

அதிமுக யாருடைய காலிலும் விழவில்லை, திமுக தான் டெல்லிக்கு சென்று பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது என ஜெயக்குமார் பேசியுள்ளார். திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஒரு மறைமுக உறவு இருப்பதாக கூறிய அவர், தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கான முழு ஆதரவை திமுக நிச்சயம் வழங்கும் என தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைத்துவிட்டு அதிமுக மூத்த தலைவர் இப்படி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


