News October 23, 2024
பரங்கிப்பேட்டை அருகே லாரி மோதி விபத்து

சீர்காழி எலந்தூரை சேர்ந்த முகிலன் 33 என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி வினோதா நண்பர்கள் விஜயபாஸ்கர், பரத் கிஷோர் ஆகியோருடன் காரில் சென்னையிலிருந்து சீர்காழி சென்றபோது, பரங்கிப்பேட்டை அருகே பெரிய குமட்டி கிலியாளம்மன் கோயில் எதிரே இன்று காலை அதே வழியில் மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்னால் மோதியதில் முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேரும் உயிர் தப்பினர்.
Similar News
News November 28, 2025
கடலூர்: வாலிபர் குண்டாசில் கைது

காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்த அறிவழகன் (29) என்பவரை அங்காளம்மன் கோயில் தெரு சஞ்சய் (23) கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்தது சம்பந்தமாக காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி.பரிந்துரையில் சஞ்சயை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று (நவ.27) உத்தரவிட்டார்.
News November 28, 2025
கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஹெடேரில் சம்பா பயிரிடப்பட்டுள்ளது. தொடர் மழை, வெள்ளம், பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாத்துக் கொள்ள பயிர் காப்பீடு செய்வது அவசியம். எனவே பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.30-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஹெடேரில் சம்பா பயிரிடப்பட்டுள்ளது. தொடர் மழை, வெள்ளம், பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் தங்களது பயிர்களை பாதுகாத்துக் கொள்ள பயிர் காப்பீடு செய்வது அவசியம். எனவே பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.30-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


