News October 23, 2024

பரங்கிப்பேட்டை அருகே லாரி மோதி விபத்து

image

சீர்காழி எலந்தூரை சேர்ந்த முகிலன் 33 என்பவர் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரது மனைவி வினோதா நண்பர்கள் விஜயபாஸ்கர், பரத் கிஷோர் ஆகியோருடன் காரில் சென்னையிலிருந்து சீர்காழி சென்றபோது, பரங்கிப்பேட்டை அருகே பெரிய குமட்டி கிலியாளம்மன் கோயில் எதிரே இன்று காலை அதே வழியில் மணல் ஏற்றி சென்ற லாரியின் பின்னால் மோதியதில் முகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேரும் உயிர் தப்பினர்.

Similar News

News September 17, 2025

கடலூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

image

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<> myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid<<>> என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News September 17, 2025

கடலூர்: லஞ்சம் வாங்கிய காவலர் பணியிட மாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் லாட்டரி டிக்கெட், போதை பொருட்கள் போன்றவற்றை தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூர் முதுநகரில் லாட்டரி டிக்கெட் விற்பனை மற்றும் மாமூல் வாங்குவதற்கு துணை போனதாக எழுந்த புகாரில் சிக்கிய தனிப்பிரிவு போலீஸ்காரர் பாபு, கடலூர் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

News September 17, 2025

கடலூர்: செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

image

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று தே.கோபுராபுரம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பியோடினார். லாரியை சோதனை செய்ததில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!