News March 16, 2024
நீலகிரி அருகே கூண்டில் சிக்கிய வேட்டை புலி

பந்தலூர் மீனாங்காடி பகுதியை சேர்ந்தவர் குரியன். இவரது கொட்டகையில், நுழைந்த புலி, ஆடுகளை வேட்டையாடி சென்றது. புகாரின் பேரில் வனத் துறையினர் கேமரா பொருத்தி புலியை கண்காணித்து வந்தனர். நள்ளிரவு கூண்டில் கட்டியிருந்த ஆட்டு குட்டியை தேடி வந்து வசமாக மாட்டிக் கொண்டது. இதனால் கிராம மக்கள் இன்று (மார்ச் 16) முதல் நிம்மதி அடைந்தனர்.
Similar News
News August 22, 2025
நீலகிரியில் இந்த வாய்ப்பை விட்டுராதீங்க!

ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2, 2A, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), இரயில்வே தேர்வு வாரியம் (RRB), மற்றும் கூட்டுறவுத் துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள, ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 0423-2444004 மற்றும் 9499055948 அழைக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News August 22, 2025
குன்னூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

குன்னூர் சிம்ஸ் பார்க் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணி முதல் 12.30 மணி வரை, மின்னு நுகர்வோர் குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் சேகர் தலைமையில் நடைபெற உள்ளது. குன்னூர் நகரம் , எடப்பள்ளி, எடக்காடு, கோத்தகிரி நகரம், நெடுகுலா, அரவேணு, உபதலை குந்தா, சேலாஸ் வெஸ்ட் புரூக், ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
BREAKING: நீலகிரி இளைஞர் தவெக மாநாட்டில் பலி!

மதுரையில் இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். அதிக வெயில், கூட்ட நெரிசலால் மயக்கமடைந்த ரோஷனுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.