News November 23, 2024
நமது ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல்?

ஐநா அமைதிப்படையின் அங்கமாக லெபனானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா என மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது. ஐநா அமைதிப்படையில் 5,000 இந்திய வீரர்கள் உலகம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News September 18, 2025
உங்க தூக்கத்த கெடுத்தது யாரு?

‘படுத்த உடனே தூங்குறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்’ என்று உங்களை பார்த்து ஒருவர் கூறினால், நீங்கள்தான் இன்று அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், இரவில் தூக்கம் வராமல் பலரும் அவதிப்படுகின்றனர். இதற்கு மதிய நேர குட்டி தூக்கம் ஒரு காரணமாக அறியப்பட்டாலும், வேறு சில காரணங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான 5 காரணங்களை மேலே உள்ள படங்களில் Swipe செய்து பாருங்கள். நீங்கள் சந்திக்கும் இடர்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 18, 2025
ஆசிய கோப்பை: AFG முதலில் பேட்டிங்

ஆசிய கோப்பையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. பேட்டிங்கில் இலங்கையும், பந்துவீச்சில் ஆப்கானிஸ்தானும் வலுவாக காணப்படுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். போட்டியில் ஆப். அணி வெற்றிபெறுவது அவசியம், தோற்கும் பட்சத்தில் குரூப் B-ல் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை, வங்கதேச அணிகள் முன்னேறிவிடும். குரூப் B-ல் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன.
News September 18, 2025
BREAKING: தவெகவில் முக்கிய மாற்றம் செய்த விஜய்

தவெகவில் நிர்வாக ரீதியாக சில மாற்றங்களை செய்து விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, CTR நிர்மல்குமாருக்கு இணை பொதுச்செயலாளர் பொறுப்புடன் ஐடி விங், வழக்கறிஞர் அணியும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகனுக்கு ஊடக அணி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், விஜயலட்சுமி, அருள்பிரகாசம், ஸ்ரீதரன், சுபத்ரா ஆகிய 4 பேர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.