News November 23, 2024
நமது ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல்?

ஐநா அமைதிப்படையின் அங்கமாக லெபனானில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா என மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், இந்திய வீரர்களின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது. ஐநா அமைதிப்படையில் 5,000 இந்திய வீரர்கள் உலகம் முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 15, 2025
SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி

OnlineSBI, YONO Lite ஆகியவற்றில் நவ.30 முதல் mCASH சேவையை நிறுத்தவிருப்பதாக SBI வங்கி அறிவித்துள்ளது. ஒருவரின் செல்போன் எண் (அ) இ-மெயில் முகவரியை கொண்டு அவருக்கு பணம் செலுத்தும் வசதியே mCASH ஆகும். ரிஜிஸ்டர் செய்து வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இனி பணம் அனுப்ப முடியும். அதேநேரத்தில், UPI(BHIM SBI Pay), IMPS, NEFT, RTGS உள்ளிட்ட மற்ற பரிவர்த்தனை முறைகளை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
News November 15, 2025
பிஹாரை போல TN-ல் வெல்ல முடியாது: வைகோ

சுயேட்சை வேட்பாளர்கள் அதிகம் போட்டியிட்டதால் தான் வாக்குகள் பிரிந்து, பிஹாரில் NDA கூட்டணி வெற்றி பெற்றதாக வைகோ கூறியுள்ளார். பிஹார் போல தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுவிடலாம் என NDA கூட்டணி நினைத்தால், அது நடக்காது என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தால் மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய மோசடிதான் SIR என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 15, 2025
₹64.3 கோடியுடன் டாப்பில் உள்ள கொல்கத்தா

IPL அணிகள் தங்கள் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று மாலை வெளியிட்டது. இதில் KKR அணி 10 வீரர்கள் விடுவித்ததன் மூலம், அதிகபட்சமாக ₹64.3 கோடியை தன்வசம் வைத்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் CSK (₹43.4 கோடி), SRH (₹25.5 கோடி) LSG (₹22.9 கோடி), DC(₹21.8 கோடி), RCB (₹16.4 கோடி), RR (₹16.05 கோடி) , GT(12.9 கோடி), PBKS(₹11.5 கோடி), MI (₹2.75 கோடி) அகிய அணிகள் உள்ளன.


