News March 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 211
▶குறள்: கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
▶பொருள்: கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
Similar News
News March 19, 2025
சரித்திரத்தில் இடம் பிடித்த சுனிதா வில்லியம்ஸ்!

நீண்ட நாள்கள் விண்வெளியில் வாழ்ந்த பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ். வலேரி (ரஷ்யா- 437), செகெய் அவ்தெயேவ் (ரஷ்யா -379), ஃப்ரான்க் ரூபியே (USA- 371), விளாடிமிர் டிடோவ், மூசா மனோரா (ரஷ்யா- 366), மார்க் வண்டே (USA- 355), ஸ்காட் கெல்லி, மிகைல் கார்னியென்கோ (USA- 340), கிறிஸ்டினா கோச் (USA- 328), பெக்கி விட்சன் (USA- 289) சுனிதா வில்லியம்ஸ் (USA- 288), புட் வில்மோர் (USA- 288).
News March 19, 2025
6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலிலும் மார்ச் 24 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதேபோல மார்ச் 22 வரை, வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
News March 19, 2025
இருமுடி இல்லாமல் சபரிமலை செல்ல கட்டுப்பாடு

இருமுடி கட்டு இல்லாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருமுடி கட்டு இல்லாத பக்தர்கள், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இதன்மூலம் இருமுடி கட்டுடன் வரும் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வசதியாக இருக்கும் என தேவசம்போர்டு விளக்கமளித்துள்ளது.