News January 25, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

Similar News

News January 17, 2026

வாடிவாசலுக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

image

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க, CM ஸ்டாலின் மதுரை, அலங்காநல்லூருக்கு விரைந்துள்ளார். காலை 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 1,100 காளைகளுக்கும், அவற்றை அடக்க 600 காளையர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ₹20 லட்சம் மதிப்பிலான காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு ஒரு டிராக்டரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

News January 17, 2026

நுரையீரல் கழிவுகளை நீக்கும் அமுக்கரா தேநீர்!

image

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அமுக்கரா இலை (3-4), மிளகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.

News January 17, 2026

ஜல்லிக்கட்டு திமுக குடும்ப விழாவா? ஆர்.பி.உதயகுமார்

image

உதயநிதி வருகைக்காக, நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு 2 மணி நேரம் தாமதம் செய்யப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆர்.பி.உதயகுமார், ஜல்லிக்கட்டு விழாவை திமுகவின் குடும்ப விழாவாக மாற்றிவிட்டதாக விமர்சித்தார். எத்தனை நாள்களுக்குத்தான் மக்கள் பொறுத்திருப்பார்கள்; ஜல்லிக்கட்டு வாடிவாசலை திறக்க இளவரசர், மன்னர் வரும் வரை மக்கள் காத்திருக்க வேண்டுமா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!