News January 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Similar News
News January 7, 2026
காவலாளி அஜித்குமார் மரணம்.. கோர்ட் அதிரடி உத்தரவு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், டிஎஸ்பி சண்முக சுந்தரம் முன்ஜாமின் கோரி மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, டிஎஸ்பியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறையை கேள்வி எழுப்பிய நீதிபதி, அவரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
News January 7, 2026
₹831 கோடி.. ஹிந்தி சினிமா வரலாற்றில் உச்சம்!

பாலிவுட் ஸ்பை ஆக்ஷன் படமான ‘துரந்தர்’, உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் ரிலீஸ் ஆகாமலேயே, உலக அளவில் இப்படம் ₹1,222 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் மட்டும் ₹831.40 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹிந்தி படங்களில் ‘புஷ்பா 2’-ஐ (₹822 கோடி) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.
News January 7, 2026
தமிழகத்தை தமிழர் ஆளணுமா? டெல்லி ஆளணுமா? CM

அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால், பாஜக தான் TN-ஐ ஆளும் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திண்டுக்கல்லில் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு TN-ல் பாஜகவின் மறைமுக ஆட்சி நடைபெற்றது. திமுக ஆட்சியில் தான் நாம் தலைநிமிர்ந்துள்ளோம் என்றார். அத்துடன், TN-ஐ தமிழர் ஆள வேண்டுமா அல்லது டெல்லி ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்வது தான் 2026 தேர்தல் என்றவர், மக்கள் எப்போதும் திமுக பக்கமே நிற்பதாக தெரிவித்தார்.


