News January 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Similar News
News December 24, 2025
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
‘மெர்சல்’ சினிமா பாணியில் நடந்த ரியல் சம்பவம்!

மெர்சல் படத்தில் ஏர்போர்ட்டில் இளம்பெண்ணை தாவி குதித்து விஜய் காப்பாற்றுவது போலவே ரியலாக கேரளாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கொச்சியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வினுவை(40) அவ்வழியாக சென்ற டாக்டர்கள் தாமஸ், திதியா, மனூப் மூவரும் சிறிதும் தாமதிக்காமல், நடுரோட்டில் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் அவரின் கழுத்தில் துளையிட்டு ஸ்ட்ரா மூலம் மூச்சுவிட செய்து காப்பாற்றியுள்ளனர். Congrats Doctors!
News December 24, 2025
இபிஎஸ்-க்கு சசிகலா ஆதரவா?

MGR நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா, உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் சிந்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், EPS-ன் தலைமை சரியில்லை என OPS, TTV விமர்சித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அக்கருத்தை ஏற்காத அவர், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். இது மறைமுகமாக EPS-க்கு ஆதரவு நிலைப்பாடு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


