News January 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Similar News
News February 4, 2026
அதிமுகவுடன் இணைந்தார்.. செந்தில் பாலாஜி அதிர்ச்சி

கொங்கு மக்கள் முன்னணி(கொமமு) தலைமை ஒருங்கிணைப்பாளர் C.ஆறுமுகம், EPS-ஐ நேரில் சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மக்கள் முன்னணி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடும் எனவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கொமமு-வுடன் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், அக்கட்சி திடீரென அதிமுகவுடன் இணைந்துள்ளது.
News February 4, 2026
ஹிந்தி திணிப்பு முயற்சிகளை கைவிடுக: தங்கம் தென்னரசு

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழைப் பின்னுக்கு தள்ளி ஹிந்திக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து X பதிவில், மக்களின் மொழி உணர்வுகளை மதிக்காமல், தெற்கு ரயில்வே மேற்கொள்ளும் இத்தகைய மறைமுக ஹிந்தி திணிப்பு முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தமிழே முன்னவள், மூத்தவள், முதன்மையானவள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 4, 2026
பட்ஜெட் பற்றி தவெகவிடம் கேட்கக் கூடாது: KAS

தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற விஜய், பட்ஜெட் பற்றி வாய் திறக்காதது சர்ச்சையானது. இந்நிலையில் அதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பட்ஜெட் பற்றி தவெகவின் கருத்தை நீங்கள் கேட்கக் கூடாது; புது இயக்கமான தவெக, TN-ல் ஆட்சியை பிடிக்க வேண்டியுள்ளதால், அதன்பின்தான் அதுகுறித்து கருத்து கூற முடியும் என தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?


