News January 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Similar News
News December 9, 2025
இரட்டை சாதனைக்கு ரெடியாகும் ஹர்திக் பாண்டியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதில், இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா இரட்டைச் சாதனைகளை படைக்க காத்திருக்கிறார். அதாவது, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவர் 140 ரன்கள் அடித்தால் 2,000 ரன்கள் கடப்பார். அதேபோல், 2 விக்கெட் வீழ்த்தினால் 100 விக்கெட் வீழ்த்திய 2-வது இந்திய வீரர் (முதலில் அர்ஷ்தீப் சிங்) என்ற சாதனையை தன்வசப்படுத்துவார். இரண்டும் நடக்குமா?
News December 9, 2025
நாளொரு புகார்; பொழுதொரு அவதூறு: KN நேரு

திமுக அரசின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ED-ஐ ஏவி அதிமுக – பாஜக கூட்டணி அவதூறு செய்வதாக KN நேரு கூறியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் <<18501393>>₹1,020 கோடி ஊழல் புகார்<<>> தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன் மீது நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பரப்பப்படுவதால் அதனை பற்றி கவலை இல்லை எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
News December 9, 2025
இறுதி கட்டத்தை எட்டிய SIR பணிகள்

தமிழகத்தில் 99.72% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. தமிழகத்தில் SIR பணிகள் நவ.4-ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் டிச.11-ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிச.16-ல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.


