News January 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Similar News
News February 5, 2026
3 சகோதரிகள் தற்கொலை.. பரபரப்பு தகவல்

காசியாபாத்தில் <<19049417>>3 சகோதரிகள் தற்கொலை<<>> வழக்கில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அச்சிறுமிகள், மரியா, அலிசா, சிண்டி என்ற கொரிய பெயர்களுடன் SM கணக்குகளை உருவாக்கியுள்ளனர். தந்தைக்கு இது தெரியவர, அவர் 10 நாள்களுக்கு முன்பு அதை டெலிட் செய்து, போன்களை அபகரித்துள்ளார். மேலும் EB bill கட்ட போன்களை விற்றதுடன், அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால்தான் சிறுமிகள் தற்கொலை செய்துள்ளனர்.
News February 5, 2026
ரொம்ப நேரம் Scroll பண்ணி, ரீல்ஸ் பாத்துட்டே இருக்கீங்களா..

பல மணி நேரம் ரீல்ஸ் வீடியோக்களை பார்ப்பது, மூளைக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என சீனாவின் Tianjin Normal University கண்டறிந்துள்ளது. இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது அதிகமாக டோபமைன் சுரப்பதால், போதைக்கு அடிமையாவதற்கு இணையான ஒரு நிலையை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர். மேலும், செய்யும் வேலையில் கவனம் குறைவது, ஞாபக சக்தி பிரச்னை போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
News February 5, 2026
மும்பை டிராபிக் ஜாம்.. ஹெலிகாப்டரில் பறந்த நபர்!

எரிவாயு லாரி கவிழ்ந்ததால், மும்பை – புனே நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. 20-22 கி.மீ வரை வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்கும் நிலையில், இதிலிருந்து தப்பிக்க, தொழிலதிபர் சுதிர் மெஹ்தா ஹெலிகாப்டரில் பறந்துள்ளார். வானில் இருந்து டிராபிக் ஜாமின் போட்டோக்களை பதிவிட்ட அவர், இது போன்ற பாதிப்பில் இருந்து தப்ப, நெடுஞ்சாலைகளில் Emergency Exit-களை வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


