News October 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 502 ▶குறள்: குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு.▶பொருள்: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
Similar News
News October 28, 2025
AK 65 இயக்குநர் இவரா? Big Update

விடாமுயற்சி, GBU என்று திரையில் ரசிகர்களுக்கு விருந்து வைத்துவிட்டு ரேஸிங்கில் பிஸியானார் அஜித். அவரது 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்நிலையில், அஜித்தின் 65-வது படத்தை ‘FIR’ பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’என்னை அறிந்தால்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது, ஆனந்த் – அஜித் இடையே ஏற்பட்ட நட்புறவால் இப்படம் கைகூடியுள்ளதாக தெரிகிறது.
News October 28, 2025
BREAKING: தீவிர புயலாக மாறியது.. கனமழை அலர்ட்

மொன்தா புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 420 கிமீ தூரத்தில் உள்ள இந்த புயல் வடக்கு நோக்கி மணிக்கு 17 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று மாலை கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் TN-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் IMD கூறியுள்ளது.
News October 28, 2025
அமித்ஷாவை அனகோண்டா என விமர்சித்த உத்தவ் தாக்கரே

அரசியல் சூழ்ச்சி மற்றும் நில அபகரிப்பு மூலம் மும்பையை முழுவதும் விழுங்க பாஜக முயற்சி செய்வதாக உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மும்பையில் நிலத்தை அபகரித்து பாஜக அலுவலகம் கட்டப்பட்டதாக வெளியான பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டிய அவர், அனகோண்டாவை போல அனைத்தையும் அமித்ஷா விழுங்குவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் ஆப்கானியப் படையெடுப்பாளர் அஹமது ஷா அப்தாலியுடன் BJP தலைவர்களை ஒப்பிட்டும் சாடியுள்ளார்.


