News October 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 497
▶குறள்:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
Similar News
News October 23, 2025
திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்போம்: IUML

திமுக கூட்டணியை விட்டு வேறு கூட்டணியை சிந்திப்பதே கிடையாது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக்(IUML) தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு 6 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகவும், குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம் என்றும் கூறியுள்ளார். கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற IUML 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News October 23, 2025
ஒளியில் தெரிவது தேவதையா! கயாது லோஹர் க்ளிக்ஸ்

பார்வையில் ஆளை சாய்க்கும் கயாது லோஹர் தமிழ் ரசிகர்களின் ரிசன்ட் கிரஸாக வலம் வருகிறார். ‘டிராகன்’ படத்தில் இதயத்தை கொள்ளையடித்து சென்ற கயாது லோஹரின் அடுத்த படத்துக்காக பலரும் காத்திருக்கின்றனர். காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என இன்ஸ்டாவில் போட்டோஸை போட்டு ரசிகர்களை தனது விழிகளில் கட்டிப்போடுகிறார். மேலே உள்ள போட்டோஸை பார்த்து நீங்களும் என்ஜாய் பண்ணுங்க..
News October 23, 2025
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் கனமழையால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கு எடுத்து உரிய நிவாரணங்களை உடனடியாக தமிழக அரசு வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்முதல் நிலையங்களின் மெத்தன போக்கால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.