News October 21, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 495
▶குறள்:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
▶பொருள்:தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.
Similar News
News October 21, 2025
ரோஹித், கோலிக்கு அஸ்வின் கொடுத்த அட்வைஸ்

கிட்டதட்ட 8 மாதங்களுக்கு பிறகு சர்வதேச தொடரில் களமிறங்கிய ரோஹித், கோலிக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி சரியாக அமையவில்லை. இந்நிலையில் இனி வரும் போட்டிகளும் இருவருக்கும் சவாலாகவே இருக்கும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடாத போது இதுபோன்ற சவால்கள் வரும் எனவும், இருவரும் பயிற்சியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
ஹமாஸை கடுமையாக எச்சரித்த டிரம்ப்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதால் ஹமாஸை டிரம்ப் கண்டித்துள்ளார். வன்முறை நிறுத்தப்படாவிட்டால் ஹமாஸ் அழிக்கப்படும் என எச்சரித்த அவர், போர் நிறுத்தம் வன்முறையை ஓரளவு குறைக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அது மீண்டும் மீறப்பட்டால், எதிர் நடவடிக்கை மோசமாக இருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
வாழ்வில் வெற்றி பெற… இவற்றை ஃபாலோ பண்ணுங்க!

★நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள் ★சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள் ★யாருடனும் உங்களை ஒப்பிட்டு கொள்ளாதீர்கள் ★பிறரை பார்த்து பொறாமைப்படுவதை நிறுத்துங்கள் ★எல்லா விஷயங்களிலும் Over Confidence ஆக இருந்துடாதீங்க ★எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, தற்போது செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள் ★யார் என்ன சொன்னாலும், உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். SHARE IT.