News October 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 488 ▶குறள்: செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. ▶பொருள்: பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.
Similar News
News October 14, 2025
‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு 2 கெட்டப்?

‘அரசன்’ படத்தில் சிறு வயது சிம்பு, 45+ வயது சிம்பு என 2 வேடங்களில் நடிக்கிறாராம். அதேபோல், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட நடிகர் உபேந்திராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கிச்சா சுதீப் இறுதி செய்யப்பட்டுவிட்டாராம். மேலும், புரொமோவும் வடசென்னையில் 2 கட்டங்களாக ஷூட் செய்யப்பட்டுவிட்டதாம். நாளை மறுநாள் புரொமோ வெளியாக உள்ளது.
News October 14, 2025
கரூருக்கு எப்போது செல்கிறார் விஜய்?

கரூருக்கு விஜய் செல்ல அனுமதிக்க கோரி SP அலுவலகத்தில் இன்று தவெக சார்பில் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த தவெக மூத்த நிர்வாகி CTR நிர்மல் குமார், விஜய் கரூர் செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறியிருந்தார். அந்தவகையில், மாவட்ட SP அனுமதி அளிக்கும் பட்சத்தில், வரும் 17-ம் தேதி விஜய் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 14, 2025
அக்டோபர் 14: வரலாற்றில் இன்று

*உலகத் தர நிர்ணய நாள். *1956 – டாக்டர் அம்பேத்கர் தனது 3.85 லட்சம் ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார். *1964 – மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். *1981 – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் பிறந்தநாள். *2005 – தமிழ் நவீன இலக்கிய ஆளுமை சுந்தர ராமசாமி இறந்தநாள்.