News October 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 486 ▶குறள்: ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. ▶பொருள்: ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
Similar News
News October 12, 2025
மதுரையில் பிரசார பயணத்தை தொடங்குகிறார் நயினார்

மதுரையில் இன்று தனது முதல்கட்ட பிரசார பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்குகிறார். அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ தொடக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும், கர்ப்பிணிகள் பங்கேற்க கூடாது உள்ளிட்ட 15-க்கும் அதிகமான நிபந்தனைகளை நயினாரின் பரப்புரைக்கு மதுரை போலீஸ் விதித்துள்ளது.
News October 12, 2025
Women’s WC: இன்று இந்தியா Vs ஆஸ்திரேலியா

மகளிர் உலக கோப்பையில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா, வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. நடப்பு தொடரில் தோல்வியே காணாத ஆஸி., இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேற நினைக்கிறது. வலுவான ஆஸி.,யை வீழ்த்த வேண்டுமானால் இந்தியா கடுமையான போட்டியை வெளிப்படுத்துவது அவசியம்.
News October 12, 2025
சிரித்தே மயக்கும் சித்தி இத்னானி!

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கவனம் ஈர்த்த சித்தி இத்னானி தற்போது தெலுங்கு, குஜராத்தி, இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார். எனினும் தமிழ் ரசிகர்களுக்காக அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி SM-ல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கன்னத்தில் குழி விழும் அளவிற்கு சிரித்து மகிழ்ந்த புகைப்படங்களை அவர் பகிர, சிரித்தே மயக்கிவிடுகிறீர்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.