News October 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 483 ▶குறள்: அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். ▶பொருள்: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.
Similar News
News October 9, 2025
CJI-ஐ தாக்க முயன்றவர் மீது வழக்கு பாய்ந்தது

CJI பி.ஆர்.கவாய்யை காலணி வீச தாக்க முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது பெங்களூருவில் Zero FIR பதியப்பட்டுள்ளது. அனைத்து இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பக்தவாத்சலா அளித்த புகாரின் அடிப்படையில், விதான் சவுதா போலீஸ் IPC 132, 133 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது. அதில் உடனடியாக அவருக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ள நிலையில், வழக்கு டெல்லி திலக் மார்க் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
News October 9, 2025
அக்டோபர் 9: வரலாற்றில் இன்று

*1897–மறைந்த முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்தநாள். *1924–இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள். *1945-இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான் பிறந்தநாள். *1967-சே குவேரா சுட்டுக் கொலை. *1968– அரசியல்வாதி அன்புமணி பிறந்தநாள்.*1987–நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம், முரசொலி நாளிதழ் கட்டடங்களை இந்திய ராணுவம் தகர்த்தது. *2001–பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியீடு. *2010– நடிகர் எஸ்.எஸ். சந்திரன் மறைந்த நாள்.
News October 9, 2025
விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய வைஷ்ணவி

கரூர் துயரத்தில் மக்களை ஏமாற்றி அனுதாபம் தேடுவதாக, விஜய்யை மறைமுகமாக தவெக முன்னாள் உறுப்பினர் வைஷ்ணவி விமர்சித்துள்ளார். 10 நாள்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, தண்ணீர் கூட குடிக்கவில்லை என்று அவர் ஏமாற்றி வருவதாகவும் வைஷ்ணவி சாடியுள்ளார். சிறந்த தலைவனாக இருக்க கூட தகுதி இல்லாத போது CM ஆக நினைக்கும் அவரது ஆசை கண்டிப்பாக நிறைவேறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.