News September 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 473 ▶குறள்: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். ▶பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
Similar News
News December 7, 2025
உரிமைகளை கேட்போர் மதவாதிகளா? தமிழிசை

மத்தியில் திமுகவினர் அமைச்சராக இருந்தபோது ஏன் மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி சிந்திக்கவில்லை என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இஃப்தார் விருந்து, கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் ஸ்டாலின், எத்தனை குடமுழுக்குகளில் கலந்து கொண்டீர்கள் என்றும் காட்டமாக கேட்டுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உரிமையை தட்டி கேட்பவர்களை மதவாதிகள் என்று முத்திரை குத்துவதாகவும் தமிழிசை விமர்சித்துள்ளார்.
News December 7, 2025
உலகின் மிக நீளமான விமான பயணம்!

உலகின் மிக நீளமான பயணிகள் விமான பயணத்தை சீனாவின் China Eastern Airlines நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரம் முதல் அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரம் வரை மொத்தம் 29 மணி நேரம் இந்த பயணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,681 கிமீ தூரம் பறக்கும் இந்த விமானம், இடையில் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் மட்டும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
‘அப்பா SORRY.. நான் சாகப் போகிறேன்’

‘அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் தாங்க முடியாது. என் சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை, நான் மட்டுமே பொறுப்பு’. ம.பி., போபாலில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த சுஜாதாவின்(27) கடைசி வரிகள் இவை. தீராத நோய் பாதிப்பில் இருந்த அவர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகம். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள் நண்பர்களே!


