News September 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை
▶குறள் எண்: 467
▶குறள்: எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
▶பொருள்: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
Similar News
News September 23, 2025
வீட்டில் உள்ள பெண்கள் என்ன செய்கிறார்கள்?

’வீட்டுல சும்மாதான இருக்க, இத செஞ்சிடு’ – இல்லத்தரசிகளிடம் நாம் சர்வசாதாரணமாக சொல்லும் விஷயம் இது. நாம் சொல்வதை போல அவர்கள் ஒருநாள் சும்மா இருந்தா என்னாகும்? பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைகளை முக்கியமானதாகவே நாம் கருதுவதில்லை. வீட்டிலுள்ள பெண்கள் எவ்வளவு உழைக்கின்றனர் என்பதை மேலே உள்ள படம் உணர்த்துகிறது. பெண்களின் உழைப்பை பாராட்ட ஒரு லைக் போடலாமே. கருத்தையும் கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News September 23, 2025
மீண்டும் குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி தயார்

‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் 2 பாகங்களும் வசூலில் பட்டையை கிளப்பியதோடு, மக்களிடமும் பெரும் வரவேற்ப்பை பெற்றன. இதை தமிழில் கமல்‘பாபநாசம். என்று ரீமேக் செய்து ஹிட் கொடுத்தார். ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கும் நிலையில் கொச்சியில் ‘த்ரிஷ்யம் 3’ நேற்று நடந்து முடிந்துள்ளது. ஜார்ஜ் குட்டி குடும்பத்தை காப்பாற்றும் அடுத்த அத்தியாயத்தை விரைவில் திரையில் காணலாம்.
News September 23, 2025
வரலாற்றில் இன்று

1799 – இலங்கையில் அனைவருக்கும் மத சுதந்திரம் வழங்கப்பட்டது
1951 – நடிகர் பி. யு. சின்னப்பாவின் நினைவு தினம்
1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனில் மோதியது
1985 – கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு பிறந்த தினம்
1996 – நடிகை சில்க் ஸ்மிதா மறைந்த தினம்