News September 5, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 449 ▶குறள்: முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. ▶ பொருள்: கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

Similar News

News September 5, 2025

தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி?

image

DMK+, ADMK+, NTK, TVK என நான்குமுனை போட்டியாக 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணியோ, ‘இன்னும் 4 மாசம்தான், பொறுத்துக்கோங்க, அப்புறம் நம்ம ஆட்சிதான். நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்’ என கூறியுள்ளார். OPS, TTV தற்போது தனியாக உள்ள நிலையில், தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் யாருக்கு சாதகம்?

News September 5, 2025

அரசு கல்லூரி: விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்

image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20-ல் தொடங்கியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வகுப்புகள் துவங்கிய நிலையில், பல்வேறு சூழல்களால் யாரேனும் விண்ணப்பிக்க தவறியிருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

News September 5, 2025

வெள்ளிக்கிழமையில் துர்க்கையின் அருளை பெற

image

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்
பொருள்:
காத்யாயனியின்(மகாதேவி) மகள் தெய்வத்தை நான் தியானிக்கிறேன்!
ஓ, துர்கா தேவி எனக்கு உயர்ந்த புத்தியைக் கொடுத்தார்!
என் மனதை ஒளிரச் செய்வாயாக! SHARE IT.

error: Content is protected !!