News August 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 437 ▶குறள்: செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். ▶ பொருள்: நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.
Similar News
News August 24, 2025
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுக: கமல்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது கட்டாயம் என கமல் தெரிவித்துள்ளார். கோட்டூர்புரத்தில் மாநில கல்வி கொள்கை உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கமல், கல்வியில் கூட்டாட்சி வழங்குவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மாநில அரசுகளுக்கு தான் அம்மாநில மக்களின் மனநிலையும், கள எதார்த்தமும் தெரியும் என்றார்.
News August 24, 2025
Health Tips: உடற்பயிற்சிக்கு பின் இதெல்லாம் சாப்பிட்டுறாதீங்க

உடற்பயிற்சி செய்துவிட்டு வந்தவுடன் சர்க்கரை பொருள்களை உட்கொண்டால் செய்த உடற்பயிற்சிக்கு பலன் இருக்காது. இதனால் உடற்பயிற்சிக்கு பின் சர்க்கரையை போலவே மது, காரமான உணவு, சர்க்கரை சேர்த்த பழச்சாறு, Junk Foods சாப்பிடுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக, புரதச் சத்து அதிகமுள்ள உணவு, Sweet Potato, பழங்கள், காய் கறிகளை உண்ணலாம். நீங்க தினமும் உடற்பயிற்சி செய்றீங்களா?
News August 24, 2025
எலும்புகளுக்கு வலுசேர்க்கும் உஸ்ட்ராசனம்!

✦முதுகு & எலும்புகளுக்கு வலுச் சேர்த்து, மூட்டு வலியை குறைக்க உதவுகிறது.
➥தரையில் மூட்டி போட்டு, முதுகு நேராக இருக்கும் நிலையில் இருக்கவும். கைகளை முதுகின் கீழ்பகுதியில் வைத்து மெதுவாக அழுத்தம் கொடுத்து, கழுத்தை பின்நோக்கி வளைக்கவும்.
➥கழுத்தை முடிந்தளவு வளைத்த பிறகு, கைகளை நீட்டி, காலை தொடவும். இந்த நிலையில், 15- 20 விநாடிகள் இருந்துவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும்.