News August 20, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 433 ▶குறள்: தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். ▶ பொருள்: பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.

Similar News

News August 20, 2025

ஆகஸ்ட் 20: வரலாற்றில் இன்று

image

*1944 – இந்தியாவின் 6-வது பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்ததினம்.
*1946 – இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய தொழிலதிபர் நாராயணமூர்த்தி பிறந்ததினம்.
*1858 – சார்லஸ் டார்வின் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கையை வெளியிட்டார்.
*1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
*1977 – நாசா வாயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
*மத நல்லிணக்க தினம் இன்று.
*உலக கொசு தினம் இன்று.

News August 20, 2025

EPS-க்கு எதிராக போலி அறிக்கை : ஆம்புலன்ஸ் சங்கம்

image

வேலூர் அருகே அணைக்கட்டில் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் வந்ததால் EPS கண்டித்தார். மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதலும் நடைபெற்றது. இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியானது. இந்நிலையில் இந்த அறிக்கை தாங்கள் வெளியிடவில்லை என்றும், சங்க லெட்டர் பேடை அவதூறாக பயன்படுத்தியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

News August 20, 2025

விஜய்யா? பாஜகவா? கூட்டணி யாருடன்: OPS பதில்

image

விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்து யாரும் தன்னை தொடர்புக்கொள்ளவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உங்களை அண்ணன் என அழைத்துள்ளாரே என கேட்டதற்கு, தன்னை அண்ணன் என அழைத்தால் அவர் தனக்கு தம்பி என்றார். பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என பதிலளித்தார்.

error: Content is protected !!