News August 19, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 432 ▶குறள்: இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. ▶ பொருள்: மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.
Similar News
News August 19, 2025
ஜெலென்ஸ்கி-புடின் சந்திப்பு: ஏற்பாடு செய்யும் டிரம்ப்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இது பற்றி டிரம்ப் வெளியிட்ட X பதிவில், புடினுடன், ஜெலன்ஸ்கி ஆலோசனை நடத்தும் வகையில் சந்திப்பு ஒன்று ஏற்படுத்தி தரவுள்ளதாகவும், இதற்கான இடம் பின்னர் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதன் பின் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் பங்கேற்கும் வகையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
ஆகஸ்ட் 19: வரலாற்றில் இன்று

1931 – ஜி. கே. மூப்பனார் தமிழக அரசியல்வாதி
1977 – சுபலட்சுமி, வங்காளத் திரைப்பட நடிகை.
186வது உலக புகைப்பட தினம்.
1978 – ஈரானில் திரையரங்கு ஒன்று தீப்பிடித்ததில் 400 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1980 – சவூதி அரேபியா ரியாத் நகரில் விமானம் தரையில் மோதித் தீப்பிடித்ததில் 301 பேர் உயிரிழந்தனர்.
2013 –பீகார் மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர்.
News August 19, 2025
பாலியல் ரீதியாக அச்சுறுத்தல்: நடிகை ரம்யா புகார்

குத்து, பொல்லாதவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் ரம்யா. ரசிகரை கொலை செய்த வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து ரம்யா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு தர்ஷனின் ரசிகர்கள் அவரை இணையத்தில் பாலியல் ரீதியாக அச்சுறுத்துவதாகவும், 43 சமூக வலைதள கணக்குகள் ஒப்படைத்து அவர்கள் மீது நடவடிக்கைக் கோரியும் புகாரளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் 7 பேர் கைதாகியுள்ளனர்.