News July 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶ இயல்: அரசியல் ▶அதிகாரம்: கல்வி ▶குறள் எண்: 391 ▶குறள்: கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. ▶ பொருள்: ஒருவன் கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றல் வேண்டும். அப்படிக் கற்றபிறகு அக்கல்விக்கேற்பத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.
Similar News
News July 10, 2025
டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம்?

ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் 12 நாட்களுக்கு பின் முடிவடைந்தது. தற்போது போர் முடிந்தாலும் ஈரான் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிரம்பை கொலை செய்ய அங்கு சிலர் திட்டமிடுவதாக தகவல்கள் உள்ளன. ஃபுளோரிடாவில் உள்ள டிரம்பின் பங்களாவில் வைத்தே கொலை செய்ய டிரோன் போதுமானது என ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதைபோன்று அவரை கொலை செய்ய 27 மில்லியன் டாலர் நிதி திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
News July 10, 2025
லாரிகள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இன்று அதிகாலையில் நடந்த விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பாலையம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணியளவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 2 லாரி டிரைவர்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 10, 2025
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு ₹1.62 கோடி மோசடி

Forex ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுகுமார், அவரது மனைவி அஸ்மிதா தன்னிடம் மோசடி செய்ததாக கூறி காவல் ஆணையரகத்தில் சந்திரசேகரன் என்பவர் புகாரளித்தார். இதனை விசாரித்த காவல்துறை விஷ்ணுகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விஷ்ணுகுமார் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், தற்பொழுது ஆன்லைன் டிரேடிங் மூலம் சுமார் ₹1.62 கோடி மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைதாகியுள்ளார்.