News July 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 389 ▶குறள்: செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. ▶பொருள்: துணையாக இருப்போர் செவிபொறுத்துக் கொள்ள முடியாத சொற்களைச் சொன்னாலும் அவற்றின் நன்மை கருதிப் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனது குடை நிழலில் உலகம் தங்கி நிற்கும்.
Similar News
News July 8, 2025
இந்திய பொருள்களுக்கு வரி.. அவகாசத்தை நீட்டித்த டிரம்ப்

USA-வில் இந்தியப் பொருள்களுக்கு வரும் நாளை முதல் 27% வரி விதிப்பு அமலாகும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான புதிய இறக்குமதி வரி விதிப்பு ஆக.1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விலை உயர்வு, சந்தை பாதிப்பு அச்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.
News July 8, 2025
செல்வப்பெருந்தகை புனிதநீர் ஊற்ற அனுமதி மறுப்பு

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை அனுமதிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, என்னை தடுத்து நிறுத்தியது ஏன் என அதிகாரிகளைத் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் 2000 ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது, அதனை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் கூறினார்.
News July 8, 2025
500 அங்கன்வாடி மையங்கள் மூடல்: அமைச்சர் மறுப்பு

ஊழியர்கள் பற்றாக்குறையால் தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்கள் மூடல் என வரும் தகவலுக்கு அமைச்சர் கீதா ஜீவன் மறுப்பு தெரிவித்தார். CM ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் புதிதாக 44 அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டதாகவும், அங்கன்வாடியில் 7783 பணியிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடைபெறுவதாகவும் கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.