News April 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 314 ▶குறள்: இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். ▶பொருள்: நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
Similar News
News November 11, 2025
ஏன் வீட்டில் ஒற்றை ஊதுபத்தி ஏற்றி வைக்கக்கூடாது?

வீடுகளில் காலை, மாலை வேளைகளில் ஊதுபத்தி ஏற்றி வைப்பது வழக்கமே. ஆனால், அந்த ஊதுபத்தியை ஏற்றி வைக்க, சில வழிமுறைகள் உள்ளன. ஜோதிடத்தின் படி, வழிபாட்டின் போது ஊதுபத்தி ஏற்றினால், எப்போதும் 2 ஏற்றி வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அதே நேரத்தில், தெய்வங்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பலரும் அறியாத இந்த அரிய தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News November 11, 2025
தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

SIR-ஐ எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வைகோ, சண்முகம், திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவிற்கு எதிரான வாக்குகளை நீக்கவே SIR கொண்டு வரப்படுவதாக திமுக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
News November 11, 2025
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கடந்த 2 வாரங்களாக மந்த நிலையில் காணப்பட்ட தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 125 டாலர்கள்(₹11,082) அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $4,126 ஆக உள்ளது. வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $50-ஐ கடந்துள்ளது. இதனால், நம்மூர் சந்தையில் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.


