News April 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 305 ▶குறள்: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால், தன்னையே கொல்லுஞ் சினம். ▶பொருள்: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
Similar News
News November 23, 2025
செய்தியாளரை ‘போடா’ என்ற சீமான்.. மீண்டும் சர்ச்சை

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசி சீமான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். SIR-யை மேற்கு வங்க அரசு போல TN அரசு எதிர்க்கவில்லை என சீமான் குற்றம்சாட்டினார். அப்போது, ECI-ன் அறிவிப்பை அரசு பின்பற்ற வேண்டும் எனக் கூறிய ஒரு செய்தியாளரை, ‘டேய் உனக்கு அறிவு இல்லையா பைத்தியக்காரா’ என ஒருமையில் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன்பு TV நிகழ்ச்சியில் ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
News November 23, 2025
குளிரில் கைகளில் வெடிப்பா? ஃபிக்ஸ் பண்ண சில டிப்ஸ்!

குளிர்காலம் வந்தாலே கைகள் வறண்டு, வெடிப்பு ஏற்படுகிறதா? தோலின் வெளிப்புற அடுக்கில் ஏற்படும் வறட்சியே இதற்கு காரணம். உங்கள் கைகளை மீண்டும் மென்மையாக மாற்ற இதெல்லாம் அவசியம். *சூடான நீரில் கைகளை கழுவாதீர்கள் *கடுமையான சோப்புகளை பயன்படுத்த வேண்டாம் *Moisturizer தடவுங்கள் *கையுறைகள் அணிவது நல்லது *தண்ணீர் நிறைய குடிக்கவும். *கைகளில் வெடிப்பு அதிகமாக இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.
News November 23, 2025
BREAKING: முன்னாள் அமைச்சர் ஹாஸ்பிடலில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


