News April 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 305 ▶குறள்: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால், தன்னையே கொல்லுஞ் சினம். ▶பொருள்: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
Similar News
News April 13, 2025
FD வட்டியை குறைத்த SBI.. எவ்வளவு தெரியுமா?

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்ததையடுத்து, பல்வேறு வங்கிகளும்<<16079100>> கடன்கள்<<>> மீதான வட்டியை குறைத்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, FD திட்டம் மீதான வட்டியை 15ம் தேதி முதல் 10 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது, 1 முதல் மூன்றரை ஆண்டுகாலம் வரை ரூ.3 கோடிக்கும் குறைந்த தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் இந்த வட்டி குறைப்பு பொருந்தும்.
News April 13, 2025
அரசு அலுவலகம், வங்கி, பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இந்நாள் அரசு விடுமுறை தினம் என்பதால், தமிழகம் முழுவதும் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ஆகும். இதனால் அனைத்து அரசு அலுவலகங்களும் அடைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், வங்கிகளும் நாளை திறக்கப்படாது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை. இதனால் அரசுத் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் நாளை நடைபெறாது.
News April 13, 2025
வைரத்தை விட மதிப்பு வாய்ந்த ரத்தினக் கற்கள்!

தங்கத்தை விட பிளாட்டினம், அதைவிட வைரம் ஆகியவை மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் வைரத்தை விடவும் மதிப்பு வாய்ந்ததுதான் கியாதுவைட் மற்றும் பைனைட் படிகங்கள். ஆழமான ஆரஞ்சு ரத்தினக் கல்லான கியாதுவைட், இதுவரை மியான்மரில் ஒரே ஒரு படிகம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர் சிவப்பு நிற ஆறுகோண படிகமான பைனைட், இதுவரை உலகம் முழுவதும் 3 மாதிரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.