News April 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
குறள் இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஈகை
குறள் எண்: 229 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. பொருள்: சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
Similar News
News April 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: அறத்துப்பால்
குறள் இயல்: துறவறவியல்
அதிகாரம்: வெகுளாமை.
குறள் எண்: 305
குறள்: தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால், தன்னையே கொல்லுஞ் சினம்.
பொருள்: ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
News April 13, 2025
பரிதாபமான நிலையில் CSK

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன்களான CSK, MI ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. குறிப்பாக IPL-லில் அதிக ரசிகர் பட்டத்தை வைத்துள்ள CSK கடைசி இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சொதப்பி வரும் CSK வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தகுதிச் சுற்றுக்கும் முன்னேற முடியும். இல்லையென்றால், லீக் சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்படும்.
News April 13, 2025
கடன்களுக்கான வட்டியை குறைத்த IOB வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை RBI குறைத்ததையடுத்து, முக்கிய வங்கிகள் <<16049712>>கடன்கள்<<>> மீதான வட்டியை குறைத்து வருகின்றன. அதன்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் (IOB) தற்போது ரெப்போவுடன் இணைக்கப்பட்டுள்ள கடன்கள் மீதான வட்டியை 9.10%ல் இருந்து 8.85% ஆக (25 புள்ளிகள்) குறைக்க முடிவு செய்துள்ளது. இது இன்று முதல் (ஏப்.12 முதல்) அமலுக்கு வந்துள்ளது. SHARE IT.