News April 7, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 229 ▶குறள்: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். ▶பொருள்: பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

Similar News

News April 9, 2025

10 வயது மூத்த பெண்ணுடன் காதலால் நேர்ந்த சோகம்

image

மதுரையில் தனியாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னை விட 10 வயது மூத்த பெண்ணான மயிலம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது தகாத உறவு இரு வீட்டாருக்குமே தெரிய வர இரு தரப்புமே அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை பிரிக்க உறவினர்கள் முடிவு செய்ததால், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

News April 9, 2025

‘குரைக்குற நாய்கள்’ தோனி ஆதரவாக கொந்தளித்த தமன்!

image

தோனி மீது கடும் விமர்சனம் வைக்கப்படும் நிலையில், அவருக்கு ஆதரவாக தமன் ஒரு பதிவை வெளியிட்டார். அவரின் பதிவில், ‘குரைக்கும் நாய்கள் அனைத்தும் அவரின் ஆட்டத்தை பார்க்கும் என்று நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டார். அப்பதிவு விமர்சனத்தை பெற, ‘தன் நாட்டுக்காக பல தொடர்களை வென்றவர், நீங்கள் சொல்லும் அனைத்து ட்ராபிகளும் அவரால் தான்!’ என மீண்டும் பதிவிட்டார். தோனியின் ஆட்டம் குறித்து என்ன நினைக்கிறீங்க?

News April 9, 2025

தமிழுக்காக போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன்

image

இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது என்று வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்குள் ஓர் இலக்கியவாதி, இலக்கியவாதிகளுக்குள் ஓர் அரசியல்வாதி. போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும் தமிழுக்காக மத்திய அரசிடம் ஓயாமல் போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

error: Content is protected !!