News December 24, 2024
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 127 ▶குறள்: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ▶பொருள்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
Similar News
News July 7, 2025
பணத்தை மிச்சப்படுத்தும் 50:30:20 ரூல்!

பணத்தை ஓடி ஓடி சம்பாதிப்பதை போல, சேமிப்பதிலும் கவனம் வேண்டும். உங்களின் வருமானத்தை 50:30:20 விதிப்படி ஒதுக்குவது நல்லது *50% அத்தியாவசிய தேவைகளுக்கு *30% தேவைகளுக்கும், சுற்றுப்பயணங்களுக்கும் *20% சேமிப்புகளுக்கு *ஒரு பெஸ்ட் ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றினால், ஒரு 24 மணி நேரம் காத்திருங்கள். பிறகு யோசியுங்கள் அது தேவையா என்று, உங்களுக்கு பதில் கிடைக்கும்.
News July 7, 2025
கன்னடத்தில் அறிமுகமாகும் அனிருத்

மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துவரும் படம் ‘டாக்ஸிக்’. இந்நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பு, படத்திற்காக யாஷின் பிறந்தநாள் டீசரில் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். ஆனால், சில காரணங்களுக்காக அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இதன்மூலம் கன்னட திரையுலகில் தடம் பதிக்கிறார் அனிருத். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ல் ரிலீஸாகவுள்ளது.
News July 7, 2025
மகளிர் உரிமைத்தொகை: வீடு வீடாக விண்ணப்பம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல் முகாமை வரும் 15-ம் தேதி சிதம்பரத்தில் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனிடையே, இன்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கவுள்ளது. இப்பணி 3 மாதங்கள் நடைபெறும் எனவும் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.