News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News January 26, 2026
CINEMA 360°: நயன்தாரா பட ரிலீஸ் தேதி இது தான்!

*மம்மூட்டி, நயன்தாரா நடித்துள்ள PATRIOT படம் ஏப். 23 அன்று ரிலீசாகிறது. *நடிகர் தினேஷ் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ பட டிரெய்லர் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. *விஜய் தேவரகொண்டாவின் 14-வது பட டைட்டில் வீடியோ இன்று வெளியாகிறது. *ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் கடந்த 10 நாட்களில் ₹31 கோடி வசூல் செய்துள்ளது. *ரவிமோகனின் கராத்தே பாபு டீசர் யூடியூபில் 2 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
News January 26, 2026
நேதாஜி பொன்மொழிகள்

*வெறும் அரசியல் சுதந்திரத்தால் தேசம் திருப்தி அடையாது. *வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம். *கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். *முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன். *உண்மையும் நேர்மையும் உள்ளவனாக இருந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக வாழலாம்.
News January 26, 2026
தேர்தலை குறிவைத்து பத்ம விருதுகள்: கார்த்தி சிதம்பரம்

இந்தாண்டுக்கான பத்மவிருதுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் அதனை காங்., MP கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். தனது X-ல் அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை இருந்திருந்தால், பத்மவிருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது அரசுக்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும் என்றும், ஆனால் இப்போது அது மிகவும் எளிது; தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்தால் போதும் எனவும் கூறியுள்ளார்.


