News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News March 30, 2025
10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்த இந்தியா? ஆளுநர்

200 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரத்தின் உலகின் முதல் நாடாக இருந்த இந்தியா, காலனி ஆட்சியில் மிகவும் பின்னோக்கி சென்றதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவை உலக நாடுகள் கண்டுகொள்ளவில்லை, ஆனால் தற்போது புரட்சிகர மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், 2047 சுதந்திர தினத்தின் போது, இந்தியா வல்லரசாக ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.
News March 30, 2025
ஹீமோகுளோபின் எகிற இத குடிங்க போதும்!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்க, இரும்புச்சத்து, வைட்டமின் சி அதிகமுள்ள ப்ளம்ஸ் பழம் (அ) பன்னீர் திராட்சை ஜூஸ் எடுத்துக்கொள்ள டாக்டர் அறிவுறுத்துகின்றனர். மாதுளை ஜூஸும் ஆகச்சிறந்ததுதான். அதேபோல், இரும்புச்சத்துடன் ஃபோலேட் சத்து அதிகமுள்ள பீட்ரூட் ஜூஸை பருகலாம். நெல்லிக்காய் + முருங்கைக்கீரையை அரைத்து குடித்தால் ஹீமோகுளோபின் அதிகரிப்பதோடு, தலைமுடி வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
News March 30, 2025
இபிஎஸ்ஸால் BJPயிடம் இதை சொல்ல முடியுமா? அமைச்சர்

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியை பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். மத்தியில் INDIA கூட்டணி ஆட்சி அமையும் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதல்வர் உறுதியளித்திருப்பதாகவும், அதே உறுதிமொழியை ராகுல் காந்தியையும் அளிக்கச் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.