News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News November 27, 2025
SIR படிவத்தில் உள்ள சிக்கலுக்கு ECI விளக்கம்

SIR படிவத்தில் உறவினர்கள் பெயர் கட்டாயமில்லை என TN தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். 2002, 2005 வாக்காளர் பட்டியலில் பெயரை கண்டறிய இயலாவிட்டால், பிற விவரங்களை நிரப்பினால் போதும் என்றும் கூறியுள்ளார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழியை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
News November 27, 2025
செல்போன் ரீசார்ஜ் கட்டணம் குறைந்தது.. அதிரடி ஆஃபர்

BSNL தனது வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில், ₹199-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாள்களுக்கு தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தினமும் 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ் உள்ளிட்ட சேவைகளும் இதில் அடங்கும். பிற நெட்வொர்க்குகளில் தினமும் 2GB டேட்டா சேவையை பெற ₹350 வரை செலவிட வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT
News November 27, 2025
தஷ்வந்த் வழக்கில் TN அரசுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

சிறுமி ஹாசினி பாலியல் கொலை வழக்கில், தஷ்வந்த் விடுதலைக்கு எதிரான தமிழக அரசின் <<18388187>>சீராய்வு மனுவை<<>> சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. 2017-ம் ஆண்டு சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு சென்னை HC மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், மரண தண்டனையை ரத்து செய்த SC அவரை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.


