News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News December 16, 2025
மாணவன் பலி.. கொதித்து எழுந்த எதிர்க்கட்சிகள்

திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து <<18583116>>மாணவன் பலியான<<>> சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ மேடை அமைத்து, தனக்கு தானே வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரித்து இருக்கலாம் என EPS விமர்சித்துள்ளார். மேலும், அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே இச்சம்பவத்தை கருத முடியும் என அண்ணாமலையும் சாடியுள்ளார்.
News December 16, 2025
பூவின் மடலாக மிர்னா மேனன்

‘ஜெயிலர்’ திரைப்படம் மூலம் பிரபலமான மிர்னா மேனன், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதில், கருப்பு நிற உடையும், அலைபாயும் தலைமுடியும் அவரது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சோபாவில் அவரது போஸ், தன்னம்பிக்கை, ஸ்டைல் மற்றும் உறுதி தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 16, 2025
விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடவுள்ள PM மோடி

ஜனவரியில் PM மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அவர், நயினாரின் யாத்திரை நிறைவு விழாவிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பூந்தமல்லி – போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை அடுத்த மாதம் PM மோடி தொடங்கி வைக்கவுள்ளாராம். இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


