News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News December 28, 2025
கிராமப்புற வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்: EPS

அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என EPS தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு தையூரில் பரப்புரை செய்த அவர் அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் உறுதியளித்தார். இளைஞர்களின் செல்வாக்கை இழந்ததால் மீண்டும் லேப்டாப் திட்டத்தை திமுக கையில் எடுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News December 28, 2025
BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்

பிக்பாஸ் நிகழ்ச்சி 84-வது நாளை எட்டிய நிலையில், கடந்த வாரத்தை போல இம்முறையும் டபுள் எவிக்ஷன் உள்ளதாம். டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கனி வீட்டைவிட்டு வெளியேறுகிறார் என தகவல் கசிந்துள்ளது. இதனால் கனியின் விர்சுவல் ஆர்மி இணையத்தில் பிக்பாஸை திட்டி தீர்த்து வருகின்றனர். அமித் பார்கவ் நேற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்க யாரு வெளியே போவானு எதிர்பார்த்தீங்க?
News December 28, 2025
இனி கல்யாணத்துக்கும் இன்ஷூரன்ஸ்!

இக்காலத்தில் திருமணத்தை நடத்த லட்சம் முதல் கோடிகள் வரை செலவாகும் நிலையில் ஏன் அதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்கக்கூடாது என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்காகவே இந்தியாவில் திருமண இன்ஷூரன்ஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி மோசமான வானிலை, திருட்டு, எமர்ஜென்ஸி போன்ற காரணங்களால் திருமணம் நின்றால் இனி நிதி பாதுகாப்பு கிடைக்கும். ₹7,000 – ₹55,000 வரை பிரீமியம் தொகை செலுத்தி இன்ஷூரன்ஸ் பெற முடியும்.


