News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News January 7, 2026
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.9 மற்றும் 10-ம் தேதி ஆகிய 2 நாட்கள் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
News January 7, 2026
22 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு!

சத்ரபதி சிவாஜி குறித்த ‘Shivaji: Hindu King in Islamic India’ புத்தகத்தில் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலை., பதிப்பகம் (OUP) மன்னிப்பு கோரியுள்ளது. 2003-ல் வெளியிட்ட புத்தகத்தில் தவறான தகவல் இடம்பெற்றதாக எதிர்ப்பு எழுந்த நிலையில், பதிப்பகமும் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், 22 ஆண்டுக்கு பின் சிவாஜியின் வாரிசு MP உதயன்ராஜே மற்றும் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக OUP தெரிவித்துள்ளது.
News January 7, 2026
நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ப்பு: திருமாவளவன்

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் மதுரை HC-ன் <<18776534>>தீர்ப்பு<<>> அரசமைப்புக்கு எதிரானது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். TN-ன் மதநல்லிணக்க சூழலை சீர்குலைப்பதற்கு வழிவகுப்பதாக கூறியுள்ள அவர், இந்த தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பை எதிர்த்து TN அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என கூறியுள்ள அவர், மாநிலத்தின் அமைதியை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


