News March 24, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 216
▶குறள்: பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.
▶பொருள்: ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
Similar News
News March 25, 2025
உங்களுக்கும் இதே மாதிரி ஃபீல் ஆகுதா?

சோர்வு, தலைச்சுற்றல், கை, கால்கள் நடுக்கம், இருமல், சளி போன்றவற்றால் பலரும் கடந்த ஒரு வாரமாக அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால், பருவகாலம் மாற்றம் மற்றும் சூரிய வெப்ப தாக்கம் அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக் கொள்ளவும், மிகவும் முடியவில்லை என்றால் டாக்டரை அணுகவும் அறிவுறுத்துகின்றனர். உங்களுக்கும் இதே ஃபீலிங் இருக்கா?
News March 25, 2025
இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு இங்கி. தடை

2009ல் LTTEக்கு எதிரான போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகள் உட்பட 4 பேருக்கு இங்கிலாந்து பொருளாதார தடை விதித்துள்ளது. முன்னாள் ராணுவ தளபதிகள் ஷவேந்திர சில்வா, கரண்ணகோடா, ஜகத் ஜெயசூர்யா, LTTEயில் இருந்து பின்னர், இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டு துணை அமைச்சரான விநாயகமூர்த்தி ஆகியோர் அந்நாட்டிற்கு வர தடை மற்றும் அவர்களது சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.
News March 25, 2025
EPS உடன் யாரெல்லாம் உள்ளனர்?

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் EPS சந்தித்து வருகிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதில், தம்பிதுரை, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பாஜகவுடனான கூட்டணிக்கு மீண்டும் அச்சாரமிடும் விதமாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.