News March 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 215 ▶குறள்: ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. ▶பொருள்: பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

Similar News

News March 24, 2025

பணம் கையில் தங்க வேண்டுமா? 3 சூப்பர் டிப்ஸ்

image

உங்களிடம் பணம் எப்போதுமே செழிப்பாக இருக்க இந்த 3 டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்கள். 1) பட்ஜெட்: மாதந்தோறும் சம்பளம் வந்ததும் அந்த மாதத்திற்கான வரவு செலவு பட்ஜெட்டை தயாரித்து, அத்தியாவசிய செலவு, பொழுதுபோக்கு செலவுகளை பட்டியலிடுங்கள். இந்த பட்ஜெட்டை மீறாதீர்கள். 2) யுபிஐக்கு பதிலாக பணத்தை கையில் கேஷாக எடுத்து செலவிடுங்கள். இது செலவை குறைக்கும். 3) அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதை தவிருங்கள்.

News March 24, 2025

இன்று கூடுகிறது சட்டப்பேரவை: என்னென்ன எதிர்பார்க்கலாம்?

image

தமிழக பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து 4 நாட்கள் விவாதம் நடந்தது. இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று காலை 9:30 மணிக்கு பேரவை கூடுகிறது. அப்போது துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துடன், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும். இன்று எதிர்க்கட்சிகள் பேசுவார்களா? வெளிநடப்பு செய்வார்களா?

News March 24, 2025

செவ்வாய் தோஷம் போக்கும் முருக வழிபாடு!

image

பூர்வ ஜென்மத்தில் பெற்றோரை சரியாகக் கவனிக்காதவர், மறுஜென்மத்தில் செவ்வாய் தோஷத்துக்காளாவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். செவ்வாய் தோஷத்தால் மனம் வாடுவோர், அந்த கிரகத்திற்குரிய அதிதேவனான முருகனுக்கு விரதமிருந்து, விருட்சிப்பூ சாற்றி, ஆறுமுக விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாடி, தேன் கலந்த தினைமாவு படைத்து வணங்குங்கள். அவர் அருளால் செவ்வாய் தோஷ பாதிப்புகள் குறைந்து, வாழ்வு செம்மையுறும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!