News April 1, 2025
மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி… மருமகன் கைது!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு இரங்கல் போஸ்டர் டிசைன் செய்து மனைவி, உறவினர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனுடன் சண்டையிட்டு, அவரது மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், மனைவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவரும் அவர், தற்போது இந்த வேலையை பார்த்துள்ளார். மனைவி அளித்த புகாரில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
Similar News
News December 3, 2025
கனமழை கொட்டும்.. 17 மாவட்டங்களுக்கு அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருச்சி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் நீடிப்பதால், மழை தொடர்ந்து பெய்யும் என்றும் IMD கூறியுள்ளது.
News December 3, 2025
BREAKING: ஓய்வை அறிவித்தார் மோஹித் சர்மா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக மொத்தமாக 34 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 37 விக்கெட்களை எடுத்துள்ளார். CSK-வுக்கு நட்சத்திர வீரராக திகழ்ந்த மோஹித், IPL-ல் ஒட்டுமொத்தமாக 134 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.
News December 3, 2025
இந்த தண்ணீரில் தலைக்கு குளிக்காதீங்க..

குளிர்காலம் என்பதால் தலைக்கு வெந்நிரீல் குளிக்கிறீங்களா? இது உங்கள் தலைமுடிக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மிகவும் சூடான நீரில் குளிப்பதால் முடியில் உள்ள Natural Oils நீக்கப்படுகின்றன. இதனால் முடி வறட்சி, முடி உதிர்வு ஏற்படுவதோடு, பொடுகு தொல்லை அதிகரிக்கும். எனவே இதற்கு பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் நீரில் தலைக்கு குளிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். அனைவருக்கும் SHARE THIS.


