News April 1, 2025

மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி… மருமகன் கைது!

image

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு இரங்கல் போஸ்டர் டிசைன் செய்து மனைவி, உறவினர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனுடன் சண்டையிட்டு, அவரது மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், மனைவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவரும் அவர், தற்போது இந்த வேலையை பார்த்துள்ளார். மனைவி அளித்த புகாரில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.

Similar News

News November 25, 2025

திமுக ஒரு மதவாத கட்சி: ஜெயபிரகாஷ்

image

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியை மறைக்கவே, உதயநிதி சமஸ்கிருதத்தை பற்றி பேசுகிறார் என பாஜக மாநில துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக தற்போது வகுப்புவாத கட்சியாக மாறிவிட்டது என்று விமர்சித்த அவர், திமுக ஆட்சியில் CM முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இந்துக்களை மிகவும் மோசமாக தரம்தாழ்த்தி பேசுகின்றனர் என்றும் சாடியுள்ளார்.

News November 25, 2025

தமிழகத்தில் தற்கொலை எண்ணத்தில் 4 ஆயிரம் பேர்

image

2022 முதல் ‘நட்புடன் உங்களோடு’ என்ற மனநல சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான ‘14416’ என்ற ஹெல்ப்லைன் மூலம், நடப்பு ஆண்டில் இதுவரை தற்கொலை எண்ணங்களுக்கு தீர்வு காண 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளதாம். குடும்ப சண்டை, கடன் தொல்லை போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்களை விட ஆண்களே அதிகமாக ஆலோசனை பெற்றுள்ளனராம். எதற்கும் தற்கொலை தீர்வல்ல நண்பர்களே..

News November 25, 2025

USA சமாதான வரைவு திட்டம் திருத்தம்: ஜெலன்ஸ்கி

image

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான USA-வின் வரைவு திட்டம் திருத்தப்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 28 அம்சங்களில் இருந்து 19 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ரஷ்யாவின் பல கோரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளதால் இதை வரவேற்பதாக கூறிய அவர், திட்டம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!