News April 3, 2025
பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான அடையாளங்கள் இடம்பெறக் கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதிய அடையாளங்களுடன் பள்ளியில் நிகழ்ச்சி நடந்ததை சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Similar News
News November 23, 2025
மக்களை சந்திக்க புறப்பட்டார் விஜய்

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தவெக தலைவர் விஜய், நீலாங்கரை இல்லத்தில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார். விஜய் வருகையையொட்டி, தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குழுவினர், பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஜேப்பியார் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
News November 23, 2025
தேர்தலுக்காக திருமா போடும் ஸ்கெட்ச்!

2021-ல் 6 தொகுதிகள் போட்டியிட்ட விசிக, தற்போது டபுள் டிஜிட் கேட்பதாக கூறப்படுகிறது. அதன்படி செய்யூர், திருப்போரூர், காட்டுமன்னார்கோவில், நாகை, அரக்கோணம், வானூர், புவனகிரி, கள்ளக்குறிச்சி, குன்னம், தருமபுரியின் ஹரூர், ஊத்தங்கரை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஊத்தங்கரையும், ஸ்ரீபெரும்புதூரும் காங்., தொகுதி என்பதால் திமுக தயங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 23, 2025
பள்ளிக்கு அருகே கிடைத்த 20 கிலோ வெடிபொருள்கள்

உத்தராகண்டின் அல்மோரா பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே 20 கிலோ வெடி மருந்துகள் கிடைத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. முன்னதாக ஹரியானாவில் வெடிபொருள்கள் சிக்கிய அடுத்த சில மணி நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்நிலையில், உத்தராகண்டில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


