News April 3, 2025

பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

image

பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான அடையாளங்கள் இடம்பெறக் கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதிய அடையாளங்களுடன் பள்ளியில் நிகழ்ச்சி நடந்ததை சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News December 10, 2025

கோவையில் நாளை முதல்! வெளியான GOOD NEWS

image

காந்திபுரத்தில் உள்ள செம்மொழி பூங்காவை காண பொது மக்களுக்கு நாளை(டிச.11) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை கடந்த 25ம் தேதியன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவையில் உள்ள மக்களை தவிர்த்து கோவைக்கு வரும் சுற்றுலா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News December 10, 2025

சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

image

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.

News December 10, 2025

வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

image

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

error: Content is protected !!