News September 13, 2024
மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகள் ஆய்வு

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவரது பின்புலத்தை அறியும் வகையில், பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, திருப்பூரில் உள்ள அவரது பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவரை இன்று மீண்டும் சென்னை அழைத்து வர முடிவெடுத்துள்ளனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 19, 2025
Photographer-களை போட்டோ பிடித்த ‘Photographer’ ஸ்டாலின்!

வெயில், மழை என எந்த சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல், உழைத்து வரும் போட்டோகிராபர்களை கொண்டாடும் விதமாக இன்று உலக போட்டோகிராபர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எந்த செய்தியானாலும், அது நமக்கு முதலில் கிடைப்பது போட்டோ வடிவில்தான். எப்போதும், போட்டோ எடுத்து திரைக்கு பின்னால் மட்டுமே நிற்பவர்களை, நேரில் வரவழைத்த CM ஸ்டாலின், அவர்களை போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.
News August 19, 2025
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அக்சர் படேல், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியில் யாரை மிஸ் பண்ணுறீங்க?
News August 19, 2025
உயிர் பயம் உள்ளது.. அஜித் மரணத்தில் அடுத்த அதிர்ச்சி

கோயில் காவலாளி அஜித் கொல்லப்பட்ட வழக்கில், அவரது தரப்பு வக்கீல் கார்த்திக் ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவிட்டும் போலீஸ் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என தெரிவித்த அவர், வழக்கை நடத்தக் கூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தும் நபர்கள் குறித்த விவரங்களை கார்த்திக் ராஜா தெரிவித்தால், மேலும் பல தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.