News March 29, 2024

குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

image

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.

Similar News

News December 17, 2025

EX IPS vs EX IRS: ‘கம்முனு இருந்திருந்தால்..’

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் <<18586251>>தவெக நிலைப்பாடு<<>> என்ன என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தவெகவின் அருண்ராஜ், அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், பதவியில் நீடித்திருப்பார் என பதிலளித்தார். ஆனால், கம்முனு இருந்து ஜால்ரா அடித்து பொறுப்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், மோடிக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்றும் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

News December 17, 2025

பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு அறிவிப்பு

image

2026, பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு களைகட்டவுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

News December 17, 2025

ஓமனில் PM மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

image

எத்தியோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு PM மோடி, ஓமனுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் தனது X பதிவில், ஓமன் இந்தியாவுடன் ஆழமான வரலாற்று தொடர்புகளைக் கொண்ட நிலம் என பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பயணம், இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும், கூட்டாண்மைக்கு உத்வேகத்தை சேர்க்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!