News March 29, 2024

குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

image

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.

Similar News

News December 27, 2025

வங்கதேசம் தான் எங்கள் நாடு: இந்துக்கள்

image

நாங்கள் இந்தியாவிற்கு செல்ல மாட்டோம் என வங்கதேச இந்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்துக்கள் என்ற ஒரே காரணத்தால், வலதுசாரி இஸ்லாமியர்கள் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்தியாவின் ஏஜெண்டுகள் என முத்திரை குத்துகின்றனர். இந்தியாவிற்கு போகச் சொல்லி எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் வங்கதேச இந்துக்கள். இங்குதான் பிறந்தோம், இங்கு தான் இறப்போம், இதுதான் எங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றனர்.

News December 27, 2025

BREAKING: பொங்கல் பரிசு.. தமிழக அரசு அறிவித்தது

image

பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளது, ஜன.10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

News December 27, 2025

15 ஆண்டு கால சோகத்திற்கு முடிவு கட்டிய இங்கிலாந்து

image

ஆஷஸ் தொடரின் முதல் 3 டெஸ்ட்டுகளை தோல்வியடைந்த இங்கிலாந்து, 4-வது போட்டியில் <<18683771>>போராடி வெற்றி<<>> பெற்றது. அதுமட்டுமின்றி ஆஸி., மண்ணில் 15 ஆண்டுகளாக சந்தித்து வந்த தொடர் தோல்விகளுக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அங்கு இதுவரை 18 போட்டிகளில் இங்கி., தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. கடைசியாக 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது.

error: Content is protected !!