News March 29, 2024
குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.
Similar News
News December 22, 2025
BREAKING: கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்

திமுகவிற்கு எதிரான ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று EPS அழைப்பு விடுத்துள்ளார். தவெகவை கூட்டணிக்கு வர வேண்டும் என நயினார் அழைத்தது பாஜகவின் கருத்து என்ற அவர், திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்களுடன் வரலாம் எனக் கூறினார். NDA கூட்டணியில் மீண்டும் OPS-ஐ இணைப்பது குறித்து நாளை பியூஷ் கோயல் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், EPS இவ்வாறு கூறியுள்ளார்.
News December 22, 2025
விஜய் கட்சியின் டெபாசிட் காலி: அர்ஜுன் சம்பத்

ஈரோட்டில் விஜய் நடத்திய பொதுக்கூட்டம் படுதோல்வி அடைந்ததாக அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். கொங்கு மண்டலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும் எனக் குறிப்பிட்ட அவர், திமுகவின் Toolkit ஆக விஜய் செயல்படுகிறார் என்றும் அவர் சாடியுள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் திமுக ஒரு நடிகரை களமிறக்கும், அந்த வகையில் மற்றொரு மக்கள் நீதி மய்யமாக(கமல்) விஜய்யின் தவெக கட்சி இயங்குவதாகவும் கூறியுள்ளார்.
News December 22, 2025
பாஜக, RSS சதியை தடுக்க வேண்டும் : மாணிக்கம் தாகூர்

மதுரையை மையமாகக் கொண்டு தமிழகத்தில் மதவெறி அரசியலைத் தூண்ட பாஜக, RSS சதி செய்வதாக காங்., MP மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். இதை தடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை எனக் கூறிய அவர், தமிழருவி மணியன் மறைமுகமாக பாஜக, RSS-க்கு வேலை பார்ப்பவர். தற்போது ஜி.கே.வாசனுடன் சேர்ந்துள்ளார். அவர் சேர்ந்த இடம் வெற்றிபெற்றதே இல்லை என்று விமர்சித்துள்ளார்


