News March 29, 2024
குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.
Similar News
News December 13, 2025
FLASH: SBI வங்கி கடன் வட்டி விகிதத்தை குறைத்தது

<<18475076>>RBI ரெப்போ வட்டி<<>> விகிதத்தை குறைத்ததை தொடர்ந்து SBI வங்கி தனது கடன் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. அதன்படி MCLR விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.70% ஆனது. மேலும், 2-3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.40% மற்றும் 444 நாட்களுக்கான FD வட்டி விகிதத்தை 6.45% குறைத்துள்ளது. இது வரும் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
News December 13, 2025
இந்தியா-ஓமன் FTA ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி

இந்தியா-ஓமன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு (FTA) மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. PM மோடி டிச.17, 18 தேதிகளில் ஓமனுக்கு செல்லும்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. FTA மூலம் இருநாடுகளிலும், சுங்க வரி வெகுவாக குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும். இதனால், இந்திய பொருள்கள் ஓமனிலும், ஓமனின் பொருள்கள் இந்தியாவிலும் மலிவான விலையில் கிடைக்கும்.
News December 13, 2025
அரசியலில் குதித்த ராமதாஸின் அடுத்த வாரிசு

பாமகவில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு இடையே ஸ்ரீகாந்தியின் மற்றொரு மகனான சுகுந்தனையும் ராமதாஸ் களமிறக்கியுள்ளார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக, முகுந்தனுக்கு பாமகவில் பொறுப்பு வழங்கியதே ராமதாஸ் – அன்புமணி இடையே சண்டை வளர முக்கிய காரணமாக அமைந்தது.


