News March 29, 2024
குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.
Similar News
News December 30, 2025
ஹமாஸ், ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

காஸாவில் அமைதி நிலவுவதற்கு ஆயுத பயன்பாட்டை ஹமாஸ் அமைப்பினர் கைவிட வேண்டும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். இதை ஏற்க மறுத்தால் ஹமாஸ் அமைப்பினர் நரகத்திற்கு செல்ல நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். நெதன்யாகு உடனான சந்திப்பிற்கு பிறகு பேசிய டிரம்ப், அணுசக்தி திட்டங்களை ஈரான் தொடர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
டிசம்பர் 30: வரலாற்றில் இன்று

*1879 – மதகுரு ரமண மகரிஷி பிறந்தநாள்
*1941 – இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து காந்தி விலகல்
*1971 – விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவு நாள்
*1975 – கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் பிறந்தநாள்
*1997 – எழுத்தாளர் ப. சிங்காரம் நினைவு நாள்
*2013 – வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள்
News December 30, 2025
பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியதற்கு IND வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. PAK-ல் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுவது எல்லோருக்கும் தெரியும் என்றும், அங்கு பல மதங்களை சேர்ந்த சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா நோக்கி விரல்களை நீட்டுவதால் அந்த உண்மை மாறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


