News March 29, 2024
குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.
Similar News
News December 25, 2025
9 பேர் பலி: CM ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

கடலூரில் நிகழ்ந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ₹3 லட்சம், படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ₹1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
News December 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 25, 2025
‘பராசக்தி’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம், குறிப்பிட்ட நாளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சாரில் பராசக்தி படத்திற்கு தணிக்கை குழு அதிக கட் வழங்கியதால், படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு படக்குழு அனுப்பியுள்ளது.


