News March 15, 2025
இந்திய அணியின் திறமைக்கு கிடைத்த பரிசு: மெக்ராத்

இந்திய அணி நியாயமற்ற முறையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதாக, தான் நினைக்கவில்லை என ஆஸி. முன்னாள் வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல முடியாத காரணத்தால் துபாயில் விளையாடியதாகவும், ஆனால், இந்தியா உள்நாட்டில் விளையாடியதை போல் சிலர் கூறுவதை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் அனுபவத்தால் இந்திய அணி மிகச் சிறப்பாக ODI-யில் விளையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 15, 2025
ஓய்வுக்கு பின் என்ன செய்வேன்? – மனம் திறந்த கோலி!

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் விராட் கோலி, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது 36 வயதாகும் அவர், ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், சக வீரரிடம் இதுபற்றி கேட்டபோது அவரும் இதே பதிலைத் தான் கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், நிறைய பயணங்கள் மேற்கொள்வேன் என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
News March 15, 2025
மகன்களை கொன்ற கொடூரத் தந்தை… அதிர்ச்சிப் பின்னணி!

அப்பாதான் எல்லோருக்கும் முதல் ஹீரோ. ஆனால், ஆந்திராவில் 2 சிறுவர்களுக்கு அப்பாவே வில்லனாகியுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ONGC ஊழியரான சந்திர கிஷோர், சரியாக படிக்கவில்லை எனக்கூறி தனது 2 மகன்களை வாளி நீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரும் தற்கொலை செய்துள்ளார். 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. கொடூர தந்தையின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 15, 2025
தட்கல் டிக்கெட் தெரியும், ப்ரீமியம் தட்கல் தெரியுமா?

ரயில்களில் அவசரகால பயணத்திற்கு தட்கல் டிக்கெட் முறை அமலில் உள்ளது. இதேபோல், ரயில்வேயில் ப்ரீமியம் தட்கல் டிக்கெட் முறையும் செயல்பாட்டில் இருக்கிறது. அதாவது, தட்கல் டிக்கெட்டில் 30% தற்போது ப்ரீமியம் தட்கல் டிக்கெட்டுக்கு செல்கிறது. இந்த டிக்கெட் கட்டணம், பேஸ் கட்டணத்தை விட 30% அதிகம். அதேபோல், தேவைக்கு ஏற்ப விமான கட்டணம் உயர்வது போல இதுவும் அதிகரிக்கும். இதை ரத்து செய்ய முடியாது.