News March 19, 2024
ஓய்வை திரும்பப் பெற்ற கிரிக்கெட் வீரர்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தனது ஓய்வை திரும்பப் பெற்றுள்ளார். முன்னதாக அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரையை ஏற்று தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து வரும் 22ஆம் தேதி நடைபெறும் வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
தமிழகத்தை கண்காணிக்க 15 குழுக்கள்!

தமிழக பேரவை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. இந்நிலையில், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் IT தற்போதில் இருந்தே கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி IT ஆணையரகம் சார்பில் 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் பணப்புழக்கத்தை கண்காணிக்கும் என்று IT தெரிவித்துள்ளது.
News November 22, 2025
ஒட்டியாணம் குறித்து சில தகவல்கள்

வாரணாசி பட விழாவில், பிரியங்கா சோப்ராவின் ஒட்டியாணம், பண்டைய இந்தியாவின் பாரம்பரியத்தை நினைவூட்டியது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பெண்கள், இடுப்பில் ஓட்டியாணம் அணிந்து வருகின்றனர். பழங்கால கோயில் சிற்பங்களிலும் இதை நாம் பார்த்திருப்போம். ஒட்டியாணம் குறித்து பலரும் அறியாத சில தகவல்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 22, 2025
பிரபலம் காலமானார்.. CM ஸ்டாலின் உருக்கமான இரங்கல்

<<18358061>>கவிஞர் ஈரோடு தமிழன்பன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் என பல பொறுப்புகளை வகித்தவர் என்றும் தனது கலைப்பணிக்காக எண்ணற்ற விருதுகளை குவித்தவர் எனவும் தமிழன்பனுக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இறுதிக்காலம் வரை தமிழுக்கு தொண்டாற்றியவர் என்றும் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


