News March 19, 2024
38.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 38.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், பெருமூச்சு விட்டுள்ளனர்.
Similar News
News April 3, 2026
ஓட்டுக்கு பணம் வாங்குவது ஜனநாயக துரோகம்: சீமான்

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வருவதில்லை, கோடிகளை சம்பாதிக்கவே வருவதாக சீமான் கூறியுள்ளார். குன்னூரில் பிரசாரம் செய்த சீமான், பணத்திற்காக நீங்கள் ஓட்டை விற்றால், அது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் தேசத் துரோகம் என்றும் தெரிவித்தார். மேலும், இலவசங்களை நம்பி ஏமாந்து வாக்களிக்காதீர்கள் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். <<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
மனித உருவத்தில் அமர்ந்தபடி காட்சி தரும் சிவன் கோயில்!

பொதுவாக சிவன் என்றாலே லிங்கமும், நடராஜர் உருவம்தான் நினைவுக்கு வரும். ஆனால், மனித ரூபத்தில், அதுவும் அமர்ந்த நிலையில், சிவன் அருள்பாலிக்கும் கோயில் ஆந்திராவில் உள்ளது தெரியுமா? அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதி திருக்கோயிலில் சிவன் சித்தாசனத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இக்கோயிலின் பெயரே ஊருக்கும் அமைந்துவிட்டது. சிவராத்திரியின் போது இங்கு 8 நாள்கள் விஷேச பூஜைகளும் நடைபெறுகிறது.
News April 3, 2026
CM ஆக EPS-ன் முதல் கையெழுத்து: SP வேலுமணி

மக்களின் கஷ்டங்களை அறிந்தே அனைத்து குடும்பத்திற்கும் ₹10,000 வழங்கப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்திருப்பதாக SP வேலுமணி தெரிவித்துள்ளார். தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியமைத்தால் முதல்வராக பொறுப்பேற்கும் EPS, அனைத்து குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் தலா ₹10,000 என்ற கோப்பில் தான் முதலில் கையெழுத்திடுவார் என அவர் கூறியுள்ளார். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


