News December 5, 2024
வரலாறு காணாத உயர்வு.. ஒரு பிட்காயின் எவ்வளவு?

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தக நிலவரப்படி ஒரு காயின் $100,000க்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் 85 லட்சமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு பிட்காயின் மதிப்பு 40% உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிட்காயின் மதிப்பு $1000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 21, 2026
குடும்ப அட்டைகளுக்கு ₹3000.. தமிழக அரசு அறிவிப்பு

TN-ல் 96% பேருக்கு பரிசு தொகுப்பு கிடைத்த நிலையில், தொலைதூர நகரங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் என 4% பேருக்கு இந்த பரிசு தொகுப்பை பெற முடியாத சூழல் எழுந்திருக்கிறதாம். எனவே ₹3000 பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பணத்தை வாங்காதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு அறிவித்துள்ளார்.
News January 21, 2026
பணத்தை மிச்சப்படுத்தும் 50:30:20 ரூல்!

சம்பாதிப்பதை போல, பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதிலும் கவனம் தேவை. இல்லையேல், திடீர் இன்னல் ஏற்படலாம். அதனால், பணத்தை 50:30:20 விதிப்படி பிரிப்பது நல்லது. அத்தியாவசிய தேவைக்கு 50% *விரும்பும் விஷயங்களுக்கு 30% *சேமிப்புகளுக்கு 20%. ஒரு ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்க ஆசை வந்தால், உடனே கடைக்கு கிளம்ப வேண்டாம். அப்பொருள் தேவையா என ஒருநாள் பொறுமையாக யோசிங்க. உங்களுக்கே பதில் கிடைக்கும்.
News January 21, 2026
சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.


