News December 5, 2024
வரலாறு காணாத உயர்வு.. ஒரு பிட்காயின் எவ்வளவு?

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தக நிலவரப்படி ஒரு காயின் $100,000க்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் 85 லட்சமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு பிட்காயின் மதிப்பு 40% உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிட்காயின் மதிப்பு $1000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 3, 2026
பிப்.10-ல் பொதுக்குழு.. அன்புமணி அடுத்த ஸ்கெட்ச்

அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக (அன்புமணி), வட மாவட்டங்களில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை காமராஜர் அரங்கத்தில் பிப்.10-ம் தேதி பாமக இளைஞரணியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்துள்ளார். இந்த பொதுக்குழுவில் தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடும் அவர், சில தொகுதிகளுக்கான வேட்பாளரையும் அறிமுகம் செய்வார் என கூறப்படுகிறது.
News February 3, 2026
தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 மானியம்

நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற Coconut Promotion Scheme திட்டம் குறித்து FM நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். *தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹10,000 மானியம் வழங்கப்படும். *உயர்தர தென்னை மரக்கன்று இலவசமாக வழங்கப்படும். *தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஹைடன்சிட்டி பிளான்டேஷன் முறை ஊக்குவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
ராகுல் நாட்டைத் தவறாக வழிநடத்துகிறார்: கோயல்

அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாக பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். ராகுல் போன்ற எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நாட்டைத் தவறாக வழிநடத்துவதாகவும், முன்னேற்றத்தைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக எப்ஸ்டீன் ஃபைல்ஸ் தொடர்பான அழுத்தங்களால் வணிக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் PM மோடி அடிபணிந்துவிட்டதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.


