News August 19, 2024
கோர்ட்டில் ஆ.ராசா ஆஜர்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் என ED வழக்குப்பதிவு செய்துள்ளதாக, அவரது தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க EDக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்,
விசாரணையை செப்.18 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தது.
Similar News
News March 26, 2026
PNG இணைப்புக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு

PNG இணைப்பை பெற விருப்பமுள்ள வணிக & தொழில்துறையினர் CGD நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என TN அரசு தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Torrent Gas: 1800-2125-6789), காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (AG&P/Think Gas: 1800-202-2999), திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Adani Total Gas: 079-47545252) தொடர்பு கொள்ளவும். இதர மாவட்டங்களுக்கு இந்த <
News March 26, 2026
தாமரைக்கு வாக்களித்து பாவம் செய்யாதீர்கள்: கருணாஸ்

தமிழக வரலாற்றில் பாஜகவுக்கு இவ்வளவு சீட் கொடுத்ததாக தனக்கு ஞாபகமில்லை என கருணாஸ் கூறியுள்ளார். அதிமுகவிடம் சீட் வாங்கிய பாஜக, சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் நிற்க வைக்கிறது; தேர்தலுக்கு பிறகு அவர்களின் வாக்கு சதவீதத்தையும் தங்கள் கணக்கில் அது சேர்த்துவிடும் என விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து, பாவகாரியம் செய்து விடாதீர்கள் எனவும் எச்சரித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
வாக்காளர் பட்டியல்.. புதிதாக சேர பொதுமக்கள் ஆர்வம்

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம் என EC தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இதுவரை 3.20 லட்சம் பேர் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.70 கோடி ஆக உயர வாய்ப்புள்ளது. <<-se>>#TNElection2026<<>>


