News April 15, 2025
தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 23, 2025
மின்சார கார்களின் விற்பனை அமோகம்

கடந்த ஆண்டு செப்டம்பரை ஒப்பிடும்போது நடப்பாண்டு மின்சார கார்களின் மொத்த விற்பனை 6,216-ல் இருந்து 15,329-ஆக அதிகரித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை 62% அதிகரித்து 6,216 கார்கள் விற்றுள்ளன. அதேபோல் JSW MG MOTORS 3,912, மஹிந்திரா நிறுவனம் 3,243, BYD இந்தியா 547, கியா இந்தியா 506, ஹிண்டாய் மோட்டார் 349, BMW இந்தியா 310, பென்ஸ் இந்தியா 97 கார்களையும் விற்பனை செய்துள்ளன.
News October 23, 2025
வரலாற்றில் இன்று

1989 – பாடகி ஜொனிதா காந்தி பிறந்தநாள்
2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை முயற்சியை முறியடித்த ராணுவம்
2002 – மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்
2011 – துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் பலி
2023 – முன்னாள் கிரிக்கெட் வீரர் பிசன் சிங் பேடியின் நினைவு நாள்
News October 23, 2025
மாத்திரைகள் ஏன் கலர்கலராக உள்ளன?

நவீன யுகத்தில் பலரின் வாழ்க்கை மாத்திரியால்தான் இயங்கிக் கொண்டிருக்கு. அப்படி இருக்கையில் மாத்திரைகள் ஏன் பல கலர்களில் இருக்கு என யோசித்ததுண்டா? ஒரு முக்கிய காரணம், படிக்காதவர்கள் கூட நிறத்தை வைத்து சரியான மத்திரையை நேரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும். மேலும், குறைவான வீரியமுள்ள மருந்துகள் பளிச் என்ற நிறத்திலும், வீரியமுள்ள மருந்துகள் அடர்த்தியான நிறத்தில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.