News April 15, 2025

தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

image

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 18, 2025

ரவுடிகளின் சாம்ராஜ்யமான சென்னை: EPS

image

திமுக ஆட்சியில் தலைநகரான சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News November 18, 2025

ரவுடிகளின் சாம்ராஜ்யமான சென்னை: EPS

image

திமுக ஆட்சியில் தலைநகரான சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

News November 18, 2025

இந்திய வீரர்கள் பயத்தில் இருக்கிறார்கள்: முகமது கைஃப்

image

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோற்றதற்கு காரணம் இந்திய அணியில் பல குழப்பங்கள் நிலவுவதுதான் என கைஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். நம் வீரர்களுக்கு சரியான ஆதரவு கிடைக்காததால், அவர்கள் அனைவரும் பயத்திலேயே விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அணியை சரியாக வழிநடத்தவில்லை என சாடிய அவர், ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!