News April 15, 2025
தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 28, 2025
ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை

வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை அடக்க வன்முறையை கையாண்டதாக எழுந்த குற்றச்சாட்டில், அந்நாட்டு Ex PM ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புர்பச்சல் ஊழல் வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில் ஹசீனா & அவரது குடும்பத்தினருக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
NDA வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளது: நாராயணசாமி

புதுச்சேரியில் INDIA கூட்டணி வாக்குகளை விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என Ex CM நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், NDA கூட்டணி பிரிந்து கிடப்பதால், அந்த வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று விஜய் முன்னிலையில் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் தவெகவில் இணைந்தார். அத்துடன், டிசம்பரில், அங்கு விஜய் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
News November 28, 2025
மோடியின் S5 கொள்கைகள் தேவை: ராணுவ தளபதி

உலக ஒழுங்கு நிச்சயமற்ற & சிதைந்த நிலையிலேயே சென்று கொண்டிருப்பதாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார். சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2025 நிகழ்வில் பேசிய அவர், சர்வதேச அளவில் பெரும் சக்திகளின் போட்டி உலகை பல துருவங்களாக பிரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, வளம் என்ற PM மோடியின் S5 கொள்கைகளின் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.


