News April 15, 2025
தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 28, 2025
GK TODAY: 3-ம் உலக நாடுகள் தெரியுமா?

1950 முதல் 1990கள் வரை அமெரிக்கா – ரஷ்யா (அன்று சோவியத் யூனியன்) பனிப்போர் காலத்தில், அமெரிக்க ஆதரவு நாடுகள் முதலாம் உலக நாடுகள், சோவியத் யூனியன் ஆதரவானவை 2-ம் உலக நாடுகள் என்றும், 2-லும் சேராத ‘அணிசேரா’ நாடுகள் 3-ம் உலக நாடுகள் எனவும் அழைக்கப்பட்டன. 1991-ல் சோவியத் யூனியன் சிதைந்த பின், பொருளாதாரத்தில் பின்தங்கிய, அரசியல் நிலையற்ற ஏழை நாடுகளை குறிப்பதாக ‘3-ம் உலக நாடுகள்’ என்பது மாறிவிட்டது.
News November 28, 2025
RCB-யை தொடர்ந்து ஏலத்திற்கு வரும் RR?

RCB அணியின் உரிமை கைமாறவுள்ளது அறிந்த செய்தியே. அந்த அணியை வாங்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது RR அணியும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இன்னும் RR அணியின் உரிமம் கைமாறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இத்தகவல் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.
News November 28, 2025
ரெட் அலர்ட்: 14 மாவட்டங்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, <<18379714>>ரெட் அலர்ட்<<>>, ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு CM ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 14 மாவட்ட கலெக்டர்களிடம் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்


