News April 15, 2025
தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 4, 2025
கூடலூர்: தாயை தாக்கிய மகன் கைது

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கம்மாள் (75). இவரது மகனான இளங்கோவனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் இளங்கோவன் கொடுத்த பணத்தினை தனது பேத்தியின் பெயரில் தபால் நிலையத்தில் உள்ள கணக்கில் போட்டுள்ளார். மீண்டும் அந்த பணத்தைக் கேட்டு இளங்கோவன் தனது தாயை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் இளங்கோவனை போலீசார் கைது (டிச.2) செய்தனர்.
News December 4, 2025
கூடலூர்: தாயை தாக்கிய மகன் கைது

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மூக்கம்மாள் (75). இவரது மகனான இளங்கோவனுக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி கோபித்துக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் இளங்கோவன் கொடுத்த பணத்தினை தனது பேத்தியின் பெயரில் தபால் நிலையத்தில் உள்ள கணக்கில் போட்டுள்ளார். மீண்டும் அந்த பணத்தைக் கேட்டு இளங்கோவன் தனது தாயை தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் இளங்கோவனை போலீசார் கைது (டிச.2) செய்தனர்.
News December 4, 2025
டீ தூள் வாங்கி மோசடி: போலீசார் விசாரணை

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நவுபல். இவர் உக்கடம் பகுதியில் தேயிலை தூள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் குனியமுத்தூர் சேர்ந்த அபுதாஹீர் (45) என்பவர் 5ஆயிரம்
கிலோ டீ தூள் வாங்கினார். இதற்கு ரூ.3.லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி 6 லட்சத்து 21 ஆயிரத்து 375 ரூபாயை கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


