News August 26, 2024
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டக புத்தகம்

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மெல்ல கற்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி கட்டகம் என்ற புத்தகம் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் இந்த பயிற்சி கட்டக புத்தகங்களை தயாரித்துள்ளனர். இவை விரைவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கூடுதல் மதிப்பெண் எடுப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்வி துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News March 3, 2026
திருநெல்வேலி: மாதம் ரூ.3,000 ..! இந்த கார்டு உள்ளதா?

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 3, 2026
நாங்குநேரி கொலை தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

நேற்று நான்குநேரியில் இரண்டு பேர் அருவாளால் வெட்டி படுகொலை நடந்தது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் பாளையம்கோட்டை எஸ் பி அலுவலகத்தில் நடை பெற்று வருகிறது. காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சட்டம் ஒழுங்கு மகேஸ்வர் தயாள், தென் மண்டல காவல்துறை தலைவர் ஐஜி விஜயேந்திர பிதாரி திருநெல்வேலி சரக டி ஐ ஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
News March 3, 2026
நெல்லை: பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? – விஜய்

நாங்குநேரி அருகே 9 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறித் தாக்குதலை கண்டித்து, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும், திமுக ஆட்சியை மக்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிராகரிப்பார்கள் எனவும் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.


