News February 15, 2025

மனைவி சாம்பலில் மண்பானை: சிலிர்க்க வைக்கும் காதல்

image

உயிரிழந்த மனைவியின் நினைவுகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் சீனக் கணவர் பியோ. இவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். அவரது கடைசி ஆசையின்படி சாம்பலை களிமண்ணில் கலந்து மண்பானையாக வடிவமைத்துள்ளார் பியோ. தான் இறந்ததும், அதில் தனது உடைமைகளை வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என வாரிசுகளிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். காதல் என்றும் அழியாது!

Similar News

News November 27, 2025

SIR விண்ணப்பங்களை உடனே சமர்ப்பிக்க ஆட்சியரின் அவசர வேண்டுகோள்

image

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக இரண்டு நாட்களில் பொதுமக்கள் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை அவகாசம் இருந்தாலும் கூட கனமழை காரணமாக இன்றும் நாளையும் இரு தினங்களை படிவங்களை வாக்குச்சாவடி முகவரிடம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

News November 27, 2025

டாஸ்மாக் கடைகளில் ரூல்ஸ் மாறியது

image

TN முழுவதும் காலி பாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் நவ.30-க்குள் அமலுக்கு வரவுள்ளது. ஏற்கெனவே 15 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள நிலையில், திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் அமலாகியுள்ளது. அதன்படி, QR CODE, கடை எண் ஒட்டப்பட்ட மதுபாட்டில் விநியோகம் செய்யப்படும். மது பாட்டிலுக்கு ₹10 அதிகம் கொடுத்து வாங்கிவிட்டு, அதே கடையில் காலி பாட்டிலை கொடுத்து பணத்தை திரும்பப் பெறலாம்.

News November 27, 2025

கடலோர பகுதிகளுக்கு நாளை இரவு முக்கிய எச்சரிக்கை

image

இந்திய பெருங்கடலில் உள்ள சுமத்திரா தீவில் 6.5 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது. இதன் எதிரொலியாக நாளை இரவு 8.30 – 11.30 மணி வரை, 2.7-3.3 மீட்டர் அளவுக்கு அலைகள் எழும்பும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீனவர்களின் உபகரணங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!