News August 2, 2024
ஏ பிளஸ் ரவுடி குடும்பத்துடன் கைது

பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சென்னையின் பிரபல ஏ பிளஸ் பிரிவு ரவுடி தேவா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தேவாவின் தந்தை சேகர், அண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 14, 2025
பசுவை காப்பவர்களுக்கு Vote பண்ணுங்க: சங்கராச்சாரியார்

பிஹாரின் 243 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்த போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். பசு வதையை பாவமாக கருதும், இந்துக்களின் பாதுகாப்புக்காக பாடுபடும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பாஜக, பசு பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பதாக மோடி கூறினாலும், நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என சாடினார்.
News September 14, 2025
பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறையா?

தீபாவளி திங்களன்று(அக்.20) வருவதால், அடுத்த மாதம் 3 நாள்கள் தொடர் விடுமுறை. இந்நிலையில், அக்.21 அன்றும் விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த காலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் லீவு கொடுத்து, அதனை ஈடுசெய்ய ஏதேனும் ஒரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படும். இம்முறையும் அப்படி செய்தால் பள்ளி மாணவர்களுக்கு 4 நாள்கள் தொடர் விடுமுறை வரும். இதுகுறித்து அரசு விரைவில் தெரிவிக்கவுள்ளது.
News September 14, 2025
PAK வீரரின் உருவ பொம்மையை எரித்த ஆம் ஆத்மியினர்

ஆசிய கோப்பை தொடரில், இன்று IND – PAK அணிகள் மோதுகின்றன. இதற்கு உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாக்., வீரர் ஃபஹீம் அஷ்ரப்பின் உருவ பொம்மையை, டெல்லி ஆம் ஆத்மி தலைவர் செளரப் பரத்வாஜ் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலின்போது பாரதமாதாவை அவதூறாக சித்தரித்த பதிவை அஷ்ரப் வெளியிட்டிருந்தார்.