News August 2, 2024
ஏ பிளஸ் ரவுடி குடும்பத்துடன் கைது

பிஎஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சென்னையின் பிரபல ஏ பிளஸ் பிரிவு ரவுடி தேவா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். தேவாவின் தந்தை சேகர், அண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News October 14, 2025
ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு.. தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் பெறும் முதியோருக்கு, தீபாவளி பரிசாக ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படும் என TN அரசு அறிவித்திருந்தது. பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை சரிபார்த்து வேட்டி, சேலைகளை வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், வயது மூப்பால் பலரின் கைவிரல் ரேகை, கருவிழி மூலம் சரிபார்ப்பது தோல்வியடைய வாய்ப்புள்ளது. அப்படியானவர்களுக்கு அங்கீகாரச் சான்று இருந்தால் வேட்டி, சேலை வழங்கலாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. SHARE
News October 14, 2025
வீட்டு வாசலை அலங்கரிக்கும் தீபாவளி கோலங்கள்

தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, பலகாரங்களோடு வாசலில் போடும் அழகான கோலங்களும் அப்பண்டிகையின் சிறப்பாகும். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அலங்கரிக்கும் அழகான கோலங்கள் உங்களுக்காக… SWIPE செய்து பாருங்க…
News October 14, 2025
உங்க வாகனத்துக்கு தவறாக அபராதம் போட்டுருக்கா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதை எப்படி ரத்து செய்ய வேண்டும் என தெரியுமா?. அதற்கு நீங்கள் https://echallan.parivahan.gov.in/gsticket/search இணையத்தில் சென்று உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, தவறான அபராதம் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். பின்னர் உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படும். SHARE IT